இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

பாகிஸ்தான் கொடிகளை விற்பனை செய்வதா? அமேசான் உள்ளிட்ட இ-வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

பாகிஸ்தான் கொடிகளை விற்பனை செய்வதா? என்று கேட்டு அமேசான் உள்ளிட்ட இ-வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

News image

இ-வணிக நிறுவனம் - கோப்புப்படம் - Center-Center-Delhi

Updated On :16 மே 2025, 2:51 pm IST

பாகிஸ்தான் கொடிகளை விற்பனை செய்த அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட இ-வணிக நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உண்டாகி, சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் நாட்டின் கொடி மற்றும் அது தொடர்பான பொருள்களை விற்பனை செய்த நிலையில், இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து, இதுபோன்ற விற்பனைகளை உடனடியாக நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில மோசமான செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய சட்டத்துக்கு எதிரான பொருள்களின் விற்பனையை இ-வணிக நிறுவனங்கள் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.