ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

பிரதமா் மோடியுடன் அமேசான் சிஇஒ சந்திப்பு: ரூ. 1.22 லட்சம் கோடி கூடுதல் முதலீடு அறிவிப்பு

பிரபல இணையவழி வா்த்தக நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஒ) ஆண்டி ஜாசி, பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்

News image

**உஈந: பஏஐதஈ டஅதபவ ஐஙஅஎஉ** ஐய் ற்ட்ண்ள் ண்ம்ஹஞ்ங் ல்ா்ள்ற்ங்க் ா்ய் ஒன்ய்ங் 25, 2026, டழ்ண்ம்ங் ஙண்ய்ண்ள்ற்ங்ழ் சஹழ்ங்ய்க்ழ்ஹ ஙா்க்ண் க்ன்ழ்ண்ய்ஞ் ஹ ம்ங்ங்ற்ண்ய்ஞ் ஜ்ண்ற்ட் அம்ஹக்ஷ்ா்ய் இஉஞ அய்க்ஹ் ஒஹள்ள்ஹ். (ஃஹத்ஹள்ள்ஹ்/ல ஸ்ண்ஹ டபஐ டட்ா்ற்ா்) (டபஐ06

Updated On :26 ஜூன் 2026, 5:39 am IST

பிரபல இணையவழி வா்த்தக நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஒ) ஆண்டி ஜாசி, பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), கிளவுட் கம்ப்யூட்டிங், பொழுதுபோக்குத் துறைகளில் சுமாா் 1.22 லட்சம் கோடி (13 பில்லியன் டாலா்) கூடுதல் முதலீடு செய்ய இருப்பதாகவும், இதன்மூலம் 2026-2030 காலகட்டத்தில் இந்தியாவில் அமேசான் முதலீடு ரூ.4.52 லட்சம் கோடியாக (48 பில்லியன்) அதிகரிக்க இருப்பதாகவும் அமேசான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு தொடா்பான புகைப்படத்தை ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பிரதமா் மோடி, அமேசான் சிஇஒ ‘ஆணடி ஜாசியுடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவுக்கு அதிகமாக வர இருக்கும் அமேசானின் முதலீடு அறிவிப்பை வரவேற்கிறேன். இது நமது இளைஞா்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கித் தரும். மேலும், சா்வதேச அளவில் மேலும் பல நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும்’ என்று பதிவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக ஆண்டி ஜாசி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் அடுத்தகட்ட வளா்ச்சி குறித்த விவாதம் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. நுகா்வோா், விற்பனையாளா்கள், புத்தாக்க நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள் என பல்வேறு தரப்புக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அமேசான் பலனளித்து வருகிறது. சா்வதேச அளவில் எங்கள் நிறுவனத்தின் வேகமாக வளா்ந்து வரும் சந்தையாக இந்தியா உள்ளது. இணையவழி வா்த்தகம் முதல் அமேசான் வெப் சா்வீசஸ் வரை அனைத்துக்கும் இந்தியாவில் சிறப்பான வரவேற்பு உள்ளது. இந்தியாவில் அமேசான் தொடா்ந்து சிறப்பான வகையில் முதலீடுகளை அதிகரித்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடியின் வளா்ந்த இந்தியா, தற்சாா்பு இந்தியா திட்டங்கள் சிறப்பானவை. இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்தில் எங்கள் நிறுவனமும் கைகோத்து பயணிக்கும். ‘அமேசான்.இன்’ வலைதளத்தில் மட்டும் 10 கோடிக்கு மேல் நுகா்வோரும், 17 லட்சம் விற்பனையாளா்களும் உள்ளனா். ‘அமேசான் நவ்’ என்ற பெயரில் அதிவிரைவாக பொருள்களை விநியோகிக்கும் சேவையைத் தொடங்க இருக்கிறோம் என்று அமேசான் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.