மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

மணிப்பூரில் அதிரடி நடவடிக்கை! 2 நாள்களில் 6 கிளர்ச்சியாளர்கள் கைது!

மணிப்பூரில் வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்...

News image

கோப்புப் படம்

Updated On :21 மே 2025, 5:32 am

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 நாள்களில், 6 கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தின் லாங்மெய்தாங், எலாங்காங்போக்பி மற்றும் காக்சிங் நிங்தௌ பரேங் ஆகிய பகுதிகளில் பதுங்கியிருந்த தடைசெய்யப்பட்ட பீப்பள்ஸ் லிபரேஷன் ஆர்மி எனும் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தௌபல் மாவட்டத்தில் காங்லெய்பாக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரும், கிழக்கு இம்பாலில் கே.சி.பி. எனும் இயக்கத்தில் பணியாற்றிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், மேற்கு இம்பால் மாவட்டத்திலும் கே.சி.பி. - பி.எஸ்.சி. அமைப்பில் செயல்பட்டு வந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது நடவடிக்கைகள் அனைத்தும், கடந்த மே 19 மற்றும் மே 20 ஆகிய இருநாள்களில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், கைது செய்யப்பட்ட கிளர்ச்சியாளர்களிடம் இருந்து துப்பாக்கிகள், அதன் தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.