இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

ஒடிசாவில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! ஒரே நாளில் 12 குற்றவாளிகள் கைது!

ஒடிசாவில் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2025, 9:31 pm IST

ஒடிசாவில் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையில் ஒரே நாளில் 12 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்திலுள்ள பெர்ஹம்பூர் பகுதியில் இன்று (மே 22) காவல் துறையினர் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். பெர்ஹம்பூர் காவல் துறை உயர் அதிகாரி சரவண விவேக் தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இதில், படா பஜார் பகுதியில் 4 பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும், பெர்ஹம்பூரின் சர்தார் காவல் துறையினரால் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்தும் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், நிமாகாண்டி மற்றும் திகாபஹாண்டி காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில், 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த முழு நடவடிக்கையில் மொத்தம் 6 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, கஞ்சம் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களில் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கைகளினால், 49 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 31 துப்பாக்கிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.