தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ஒடிசாவில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! ஒரே நாளில் 12 குற்றவாளிகள் கைது!

ஒடிசாவில் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2025, 9:31 pm IST

ஒடிசாவில் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையில் ஒரே நாளில் 12 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்திலுள்ள பெர்ஹம்பூர் பகுதியில் இன்று (மே 22) காவல் துறையினர் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். பெர்ஹம்பூர் காவல் துறை உயர் அதிகாரி சரவண விவேக் தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இதில், படா பஜார் பகுதியில் 4 பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும், பெர்ஹம்பூரின் சர்தார் காவல் துறையினரால் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்தும் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், நிமாகாண்டி மற்றும் திகாபஹாண்டி காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில், 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த முழு நடவடிக்கையில் மொத்தம் 6 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, கஞ்சம் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களில் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கைகளினால், 49 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 31 துப்பாக்கிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.