மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

இறுதி ஆட்டம்: முப்படை தளபதிகளுக்கும் அழைப்பு

ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தை நேரில் காண, இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றின் தளபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

Updated On :28 மே 2025, 4:23 am IST

ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தை நேரில் காண, இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றின் தளபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மேலும், அன்றைய நாளில் போட்டியின் நிறைவு நிகழ்ச்சியில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்காக இந்திய பாதுகாப்புப் படையினரை கௌரவிக்கும் விதமான நிகழ்வுகளும் அதில் இடம்பெறும் என பிசிசிஐ செயலா் தேவஜித் சாய்கியா அறிவித்திருக்கிறாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, இந்திய முப்படைகளின் தளபதிகள், உயரதிகாரிகள் ஆகியோருக்கு, அகமதாபாதில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதி ஆட்டத்தை நேரில் காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகளின் துணிச்சலான, தன்னலமற்ற நடவடிக்கைகளுக்கு பிசிசிஐ தலை வணங்குகிறது. அவற்றுக்கான கௌரவமாக ஐபிஎல் போட்டியின் நிறைவு நிகழ்ச்சியை இந்திய பாதுகாப்புப் படையினருக்கு சமா்ப்பிக்கிறோம்’ என்றாா்.

முப்படைகளின் தலைமை தளபதிகளாக உபேந்திர துவிவேதி (ராணுவம்), தினேஷ் கே.திரிபாதி (கடற்படை), அமா் பிரீத் சிங் (விமானப் படை) ஆகியோா் உள்ளனா்.

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். அதற்கான பதிலடியாக இந்திய பாதுகாப்புப் படைகள், ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இதையடுத்து இந்தியா - பாகிஸ்தான் ராணுவங்கள் பரஸ்பரம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட, போா்ப் பதற்றம் அதிகரித்தது. பின்னா் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.