மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கருத்துக் கணிப்புகள் முடிவுகளாக மாறி வருகின்றன: விஜய் குமார் சின்ஹா!

மக்களின் தீர்ப்பை பிரதிபலிக்கும் பிகார் தேர்தல் முடிவுகள்..

News image
விஜய் குமார் சின்ஹா- ANI
Updated On :14 நவம்பர் 2025, 6:22 am

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளால் கணிக்கப்பட்ட மக்களின் தீர்ப்பு முடிவுகளாக மாறிவருவதாக பிகார் துணை முதல்வரும், லக்கிசராய் தொகுதிக்கான பாஜக வேட்பாளருமான விஜய் குமார் சின்ஹா கூறினார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியைக் கணித்துள்ளன.

இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு சின்ஹா அளித்த பேட்டியில் கூறியதாவது,

கருத்துக் கணிப்புகள் பொதுமக்களின் தீர்ப்பைப் பிரதிபலிக்கின்றன. எதிர்பார்த்தது இப்போது முடிவுகளாக மாறி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நிதிஷ் குமார் மீது மக்கள் காட்டிய நம்பிக்கை நாட்டிற்கு வழிகாட்டும். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் காட்டியதை விட எங்கள் முடிவு சிறப்பாக இருக்கும்.

ஆர்ஜேடி தலைவரும் மகாகத்பந்தனின் முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை காடுமையாக சாடிய சின்ஹா, தேவையற்ற சூழலை பரப்புகிறார்கள், எனவே யாரும் அவர்களின் வார்த்தைகளை பெரயதாக எடுத்துக்கொள்வதில்லை.

விஜய் குமார் சின்ஹா ​​பர்ஹியாவில் உள்ள ஜெய் பாபா கோவிந்த் கோயில், ஜக்தம்பா கோயிலில் வழிபாடு செய்தார். இதற்கிடையில், துணை முதல்வர் காலை 10:30 மணி நிலவரப்படி லக்கிசராய் தொகுதியில் முன்னிலை வகித்தார்.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 122 தொகுதிகளின் பாதியை தாண்டியுள்ளது, அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி இந்திய தேர்தல் ஆணையத்தின்படி பின்தங்கியுள்ளது.

229 இடங்களில் முன்னிலையின்படி, என்டிஏ 167 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, பாரதிய ஜனதா கட்சி 71 இடங்களிலும், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் (ஐக்கிய) 72 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. சிராக் பாஸ்வானின் எல்ஜேபி(ஆர்வி) 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

summary

Bihar Deputy Chief Minister and BJP candidate for the Lakhisarai seat, Vijay Kumar Sinha, on Friday said that the public mandate predicted by the exit polls will translate into results in the Assembly elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.