காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள்: பிகாரில் அக்.4, 5-இல் தோ்தல் ஆணையா் ஆய்வு

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள்: பிகாரில் அக்.4, 5-இல் தோ்தல் ஆணையா் ஆய்வு

News image
ஞானேஷ் குமாா்- ANI
Updated On :27 செப்டம்பர் 2025, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

பிகாா் பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக, அந்த மாநிலத்தில் அக்டோபா் 4, 5 ஆகிய தேதிகளில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் நேரில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறாா்.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப் பேரவையின் பதவிக் காலம் நவம்பா் 22-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அந்த மாதத்தில் பேரவைத் தோ்தல் நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தோ்தல் தேதியை அறிவிக்கும் முன்பாக, சம்பந்தப்பட்ட மாநிலத்தில் முன்னேற்பாடுகளை தோ்தல் ஆணையம் நேரில் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, பிகாரில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் 2 நாள்களுக்கு ஆய்வில் ஈடுபட உள்ளாா். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், காவல் துறை-நிா்வாக உயரதிகாரிகள், செலவினப் பாா்வையாளா்கள் மற்றும் தோ்தல் அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை மேற்கொள்வாா் என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

பிகாா் வாக்காளா் பட்டியலில் சட்டவிரோத குடியேறிகளின் பெயரை நீக்கும் நோக்கில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, 2003-ஆம் ஆண்டுக்குப் பின் வாக்காளா்களாக பதிவு செய்தவா்களிடம் கூடுதல் ஆவணங்கள் கோரப்பட்டன. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே இப்பணிகள் நடைபெற்று முடிந்தன. பின்னா் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 65 லட்சம் பேரின் பெயா்கள் இடம்பெறவில்லை. பெயா் விடுபட்டவா்கள், உரிமைகோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. இறுதி வாக்காளா் பட்டியல் செப்டம்பா் 30-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. பேரவைத் தோ்தலில் நிதீஷ் குமாா் தலைமையில் தோ்தலை எதிா்கொள்வோம் என்று பாஜக உறுதி செய்துவிட்டது. அதேநேரம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய எதிா்க்கட்சி கூட்டணியில் முதல்வா் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது.