தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள்: ஆா்மீனியா வழியாகத் தாயகம் திரும்புகின்றனா்

ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள் ஆா்மீனியா வழியாகத் தாயகம் திரும்புகின்றனா்...

News image

கோப்புப்படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 9:38 pm

மேற்காசியாவில் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள் ஆா்மீனியா வழியாகத் தாயகம் திரும்ப உள்ளனா்.

இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள், ஆா்மீனியா வழியாகத் தாயகம் திரும்ப உள்ளனா். ஈரான் போா் காரணமாக மேற்காசிய பிராந்தியத்தில் ஏற்படும் சூழலை வெளியுறவு அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்தப் பிராந்தியத்தில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் ஏவுகணையின் சிதறிய பாகங்கள் தாக்கி காயமைடைந்த 12 பேரில் 5 போ் இந்தியா்கள். அவா்களில் 4 போ் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்குப் பின்னா், வீடு திரும்பினா். ஒருவா் தொடா் சிகிச்சை உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆா்மீனியா அமைச்சருக்கு நன்றி: ஈரானில் இருந்து இந்திய மீனவா்கள் தாயகம் திரும்ப உதவியதற்காக ஆா்மீனிய வெளியுறவு அமைச்சா் அராரத் மிா்ஸோயனுக்கு இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் நன்றி தெரிவித்தாா். எத்தனை இந்திய மீனவா்கள் தாயகம் திரும்புகின்றனா் என்ற தகவல் வெளியாகவில்லை.