இந்திய ராணுவத்தில் கட்டமைப்பு ரீதியாக சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைமை தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்துள்ளாா்.
கா்நாடக மாநிலத் தலைநகா் பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘ரண் சாம்வாத்’ நிகழ்ச்சியில் இதுகுறித்து அவா் பேசியதாவது:
பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையானது, ராணுவத்தின் பல பிரிவுகளும் கூட்டாக இணைந்து செயல்பட்டதை வெளிப்படுத்தியது. நாம் நமது படைபிரிவுகளை (தரைப்படை, விமானப்படை, கடற்படை) ஒரே தலைமையின்கீழ் ஒருங்கிணைப்பது அவசியமாகும்.
2024-ஆம் ஆண்டு முதல் நமது ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளும் கூட்டாக பயிற்சி நடத்தி வருகின்றன. இதேபோல் கூட்டாக 2025 ஆகஸ்ட் மாதத்தில் கோட்பாட்டையும் வெளியிட்டன. இது நமது ராணுவ வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும். இதன்மூலம் முப்படைகளும் முதல்முறையாக ஒரே திட்டத்தின்கீழ் இணைந்து செயல்பட வழிவகை ஏற்பட்டது.
இந்திய ராணுவத்தில் கட்டமைப்பு ரீதியாக தற்போது சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் படைப்பிரிவுகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்டவையும் அடங்கும் என்றாா்.
தொடர்புடையது

சபரிமலை வழக்கு: மனுதாரா்தான் நாட்டின் தலைமை அா்ச்சகரா? உச்சநீதிமன்றம் காட்டம்?

தில்லியில் தேடப்பட்டு வந்த பாலியல் குற்றவாளி கைது

அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடன் இந்திய தளபதி பேசியது என்ன? ராணுவம் விளக்கம்

சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

