12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ம.பி.யில் லாரி மோதி பழங்குடியினர் 5 பேர் பலி!

மத்தியப் பிரதேசத்தில் அதிவேகமாக வந்த லாரி மோதியதில் பழங்குடியினர் 5 பேர் பலியாகினர்.

Five tribal men killed as speeding truck runs them over in MP’s Dindori

கோப்புப்படம்.

Published On :

மத்தியப் பிரதேசத்தில் அதிவேகமாக வந்த லாரி மோதியதில் பழங்குடியினர் 5 பேர் பலியாகினர்.

மத்தியப் பிரதேச மாநிலம், திண்டோரி மாவட்டத்தின் கடசராய் பகுதியில் குடும்ப விழாவில் கலந்துகொண்டு, பழங்குடியினர் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தங்கள் சொந்த கிராமமான பரஸ்வாவிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பழங்குடியினர் பயணித்த பிக்கப் வாகனத்தின் டயர் பஞ்சரானதைத் தொடர்ந்து, 5 முதல் 6 பேர் ஓட்டுநருக்கு உதவத் தொடங்கினர்.

அதே நேரத்தில், எதிர்திசையில் இருந்து அதிவேகமாக வந்த லாரி திடீரென பழங்குடியினர் மீது மோதியது. இந்த விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவரான உதய் பிரதாப் சிங் (20), திண்டோரி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் லாரியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விபத்து குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. திண்டோரி மாவட்ட ஆட்சியர் அஞ்சு பவன் படோரியாவின் கூறுகையில், “பலியான ஐந்து பேரின் குடும்பத்தினருக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் தலா ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசின் சம்பல் திட்டத்தின் கீழ் தலா ரூ.4 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Summary

Acting in the matter, the police have arrested the driver of the vehicle that killed the five tribal men, and further investigations are underway.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.