இந்தியாவுடன் மோதல் போக்கில் ஈடுபடுவதால் எதையும் சாதிக்க முடியாது; அது அழிவுக்குதான் வழிவகுக்கும் என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.
இந்திய காலாட்படையின் ஜம்மு-காஷ்மீா் லைட் இன்ஃபன்ட்ரி பிரிவின் நிகழ்ச்சி ஸ்ரீநகரில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஃபரூக் அப்துல்லா பேசியதாவது:
மோதல் போக்கில் ஈடுபடுவதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது, அது அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும் என்பதை நமது நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன். அவா்கள் நீண்டகாலமாக தேவையற்ற மோதல்களைத் தொடா்ந்து வருகிறாா்கள். இதனால், எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதை புரிந்துகொண்டு மோதலைக் கைவிட வேண்டும்.
இந்தப் படைப் பிரிவு அனைத்து நிலைகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். உலகம் முழுவதும் அமைதியும், செழிப்பும் நிலவ வேண்டும் என்றாா்.
தொடர்புடையது
மனநிலை மாற வேண்டும்!
தொழில்நுட்பத்தை யாரும் தடுக்க முடியாது!

சீனா, ரஷியா இணைந்து போரை முடிவுக்குக் கொண்டுவரும்: ஃபரூக் அப்துல்லா

மேற்கு வங்கம், கேரளம், தமிழக பேரவைத் தேர்தல்களில் இவர்கள் வெற்றி பெறுவர்: ஃபரூக் அப்துல்லா
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

