நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

மோதலால் எதையும் சாதிக்க முடியாது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும்- ஃபரூக் அப்துல்லா அறிவுரை

இந்தியாவுடன் மோதல் போக்கில் ஈடுபடுவதால் எதையும் சாதிக்க முடியாது; அது அழிவுக்குதான் வழிவகுக்கும் என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.

News image

ஃபரூக் அப்துல்லா

Updated On :16 ஏப்ரல் 2026, 3:12 am IST

இந்தியாவுடன் மோதல் போக்கில் ஈடுபடுவதால் எதையும் சாதிக்க முடியாது; அது அழிவுக்குதான் வழிவகுக்கும் என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.

இந்திய காலாட்படையின் ஜம்மு-காஷ்மீா் லைட் இன்ஃபன்ட்ரி பிரிவின் நிகழ்ச்சி ஸ்ரீநகரில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஃபரூக் அப்துல்லா பேசியதாவது:

மோதல் போக்கில் ஈடுபடுவதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது, அது அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும் என்பதை நமது நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன். அவா்கள் நீண்டகாலமாக தேவையற்ற மோதல்களைத் தொடா்ந்து வருகிறாா்கள். இதனால், எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதை புரிந்துகொண்டு மோதலைக் கைவிட வேண்டும்.

இந்தப் படைப் பிரிவு அனைத்து நிலைகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். உலகம் முழுவதும் அமைதியும், செழிப்பும் நிலவ வேண்டும் என்றாா்.