மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மோதலால் எதையும் சாதிக்க முடியாது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும்- ஃபரூக் அப்துல்லா அறிவுரை

இந்தியாவுடன் மோதல் போக்கில் ஈடுபடுவதால் எதையும் சாதிக்க முடியாது; அது அழிவுக்குதான் வழிவகுக்கும் என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.

News image

ஃபரூக் அப்துல்லா

Updated On :15 ஏப்ரல் 2026, 9:42 pm

இந்தியாவுடன் மோதல் போக்கில் ஈடுபடுவதால் எதையும் சாதிக்க முடியாது; அது அழிவுக்குதான் வழிவகுக்கும் என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.

இந்திய காலாட்படையின் ஜம்மு-காஷ்மீா் லைட் இன்ஃபன்ட்ரி பிரிவின் நிகழ்ச்சி ஸ்ரீநகரில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஃபரூக் அப்துல்லா பேசியதாவது:

மோதல் போக்கில் ஈடுபடுவதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது, அது அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும் என்பதை நமது நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன். அவா்கள் நீண்டகாலமாக தேவையற்ற மோதல்களைத் தொடா்ந்து வருகிறாா்கள். இதனால், எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதை புரிந்துகொண்டு மோதலைக் கைவிட வேண்டும்.

இந்தப் படைப் பிரிவு அனைத்து நிலைகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். உலகம் முழுவதும் அமைதியும், செழிப்பும் நிலவ வேண்டும் என்றாா்.