குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

கேரளம்: அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்கள்; ஒரே நாளில் 16 பேர் பாதிப்பு

கேரளத்தில் சமீபமாக பாம்புக் கடி சம்பவங்கள் அதிகரிப்பு குறித்து...

News image

கேரளத்தில் அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்கள் - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 4:13 pm

கேரளத்தில் சமீபகாலமாக பாம்புக் கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

கேரளத்தின் பெரும்பாலான பகுதிகள் மலைகளால் சூழப்பட்டிருப்பதுடன், அப்பகுதிகளில் பாம்புகளும் அதிகம் காணப்படும். இந்த நிலையில், கேரளத்தில் அதிகரித்த கோடை வெப்பத்தின் காரணமாக, பாம்புகள் குளிர்ச்சியான இடங்களைத் தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவது சமீபத்தில் அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் கடந்த 3 நாள்களில் மட்டும் 54 பேர் பாம்புக் கடிக்கு ஆளாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, திங்கள்கிழமை (ஏப். 27) ஒருநாள் மட்டுமே 16 பேர் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.

அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்களையடுத்து, மாநிலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களிலும் பாம்புக் கடிக்கான எதிர்ப்பு மருந்துகளை தயாராக வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இரவு நேரங்களில் விழிப்புணர்வுடனும் பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாம்புக் கடி பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகவும் மாநில சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

இதனிடையே, பாம்புக் கடி சம்பவங்கள் தொடர்பாக மாநிலத்தில் உள்ள இன்ஃப்ளூன்சர்கள் நகைச்சுவையாக ரீல்ஸ்களும் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

Keralam issues guidelines as snakebite incidents rise amid heatwave

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.