பாலியல் வன்கொடுமை வழக்கில் பத்திரிகையாளா் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு கோவாவில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்க சென்றபோது சக பெண் பணியாளரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ‘தெஹல்கா’ பத்திரிகையின் முன்னாள் தலைமை செய்தி ஆசிரியா் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கை விசாரித்து வந்த கோவாவின் மபுசா அமா்வு நீதிமன்றம், அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் தேஜ்பாலை விடுவித்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீலா கோகலே மற்றும் அமித் ஜம்சண்டேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, கோவா நீதிமன்றத்தின் தீர்ப்பை வியாழக்கிழமை ரத்து செய்தது.
மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376(2)(டி), 376(2)(கே) மற்றும் 354ஏ, 354பி ஆகியவற்றின் கீழ், தேஜ்பாலை குற்றவாளி என மும்பை உயர் நீதிமன்றம் அறிவித்தது.
தண்டனை அறிவிப்பதற்கு முன்னதாக நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்த தேஜ்பால், தனக்கு தற்போது 62 வயதாகிறது என்றும், கருணை காட்டுமாறும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் ரூ. 10.10 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், சிறைத் துறை அதிகாரிகள் முன் ஆஜராக தேஜ்பாலுக்கு 2 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
Summary
Rape case! Journalist Tarun Tejpal sentenced to 10 years in prison!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

கானா: கோகோ விவசாய நில பயன்பாட்டை மாற்றினால் 20 ஆண்டுகள் சிறை

பெண்ணை வெட்டிய விவசாயிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
விடியோக்கள்

ஈரானுக்கு டிரம்ப் விடுக்கும் எச்சரிக்கை! | Donald Trump | Iran | Hormuz Strait |




