வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

முன்னாள் ரௌடி - என்கவுண்டர் செய்யப்பட்ட அரசியல்வாதி ஆதிக் அகமது மகன் விபத்தில் பலி! கடைசியாக சொன்ன வார்த்தை

உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் ரௌடியும் என்கவுண்டர் செய்யப்பட்ட அரசியல்வாதியுமான ஆதிக் அகமது மகன் விபத்தில் பலியானார்.

News image

சாலை விபத்து

Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:17 pm IST

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்ஸியில் நிகழ்ந்த சாலை விபத்தில், ரௌடியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய மறைந்த ஆதிக் அகமது மகன் அபான் பலியானார்.

விபத்தில் சிக்கிய காரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அபான், தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சியிருக்கிறார். ஆனால், காரில் சிக்கியிருந்த அவரை மீட்க மக்கள் எவ்வளவோ முயன்றும் முடியாமல் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மிக வேகமாக வந்த கார், சாலைத் தடுப்பில் மோதியதில், கார் இருந்த அபான் மற்றும் அவரது நண்பர் சோனு இருவரும் பலியாகினர். பிரயாக்ராஜிலிருந்து ஜான்ஸி நோக்கி வந்து கொண்டிருந்த காரில் ஐந்து பேர் இருந்துள்ளனர்.

வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாக இன்று காலை 10.30 மணிக்கு காவல்துறைக்குத் தகவல் வந்துள்ளது.

விரைந்து சென்ற காவல்துறை, உடல்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கூறுகையில், கார் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆதிக் அகமதுவின் ஐந்து மகன்களில் அபான் இளைய மகனாவார். தற்போது இவரது இரண்டு மகன்கள் உத்தரப்பிரதேசத்தின் வெவ்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, ஆதிக் அகமது குடும்பத்தில், இவர்களது மூத்த மகன் ஆசாத் அகமது, அவரது சகோதரர் அஷ்ரஃப், ஆதிக் அகமது ஆகியோர் காவல்துறை என்கவுண்டர்களில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அப்பகுதியில் லேசாக மழை பெய்திருந்ததும், கார் மிக வேகமாக வந்ததும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழக்கக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.