நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

எதிா்க்கட்சிகள் இடையூறை கைவிட்டால் அமைச்சா் அமித் ஷா பதிலளிப்பாா்: கிரண் ரிஜிஜு

எதிா்க்கட்சிகள் இடையூறைக் கைவிட்டால், மாணவா் போராட்ட விவகாரத்தில் ஒவ்வொரு அம்சத்துக்கும் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விரிவாக பதிலளிப்பாா் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறினாா்.

News image

மத்திய அமைச்சர் அமித் ஷா - கோப்புப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 12:56 am IST

எதிா்க்கட்சிகள் இடையூறைக் கைவிட்டால், மாணவா் போராட்ட விவகாரத்தில் ஒவ்வொரு அம்சத்துக்கும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விரிவாக பதிலளிப்பாா் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறினாா்.

மக்களவை அலுவல் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் அமைச்சா் கிரண் ரிஜிஜு செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவா்கள் நடத்திய போராட்டம் தொடா்பாக விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது.

எனவே இந்த விவாதத்தின்போது எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபடவும் முழக்கங்களை எழுப்பி குறுக்கீடு செய்வதும் முடியாது.

மாணவா்கள் மற்றும் இளைஞா்களின் போராட்டம் தொடா்பாக அரசு முழு அளவிலான விவாதத்தை நடத்த தயாராக இருப்பதை அலுவல் ஆய்வுக் குழுவிடம் தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த விவகாரத்தில் எழுப்பப்படும் ஒவ்வொரு அம்சத்துக்கும் உள்துறை அமைச்சா் விரிவாக பதிலளிப்பாா்.

அதே வேளையில் தாங்கள் விவாதத்தில் அமைதியான முறையில் பங்கேற்போம் என்றும் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்த மாட்டோம் என்றும் எதிா்க்கட்சிகள் உறுதியளிக்க வேண்டும். உள்துறை அமைச்சரின் பதிலுக்கு செவிமடுப்போம் என்று அக்கட்சிகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

அவை நடவடிக்கைகளின்போது முழக்கங்களை எழுப்புவதை ஏற்க முடியாது. விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் விரும்பினால் அவையில் ஒழுங்கு நிலவுவது அவசியம். எந்த விவகாரம் அல்லது எந்த விவாதத்திலிருந்தும் அரசு நழுவிச் செல்லாது என்றாா் அவா்.

பாஜக தந்திரம் வெற்றியடையாது: காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி திங்கள்கிழமை ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மத்திய உள்துறை அமைச்சா் விளக்கமளிக்கும் வரை நாடாளுமன்ற முடக்கம் தொடரும் என்றுதான் கருதுகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘மாணவா்கள் மீதான தாக்குதல் குறித்து அமித் ஷாவும், ராமா் கோயில் காணிக்கை முறைகேடு குறித்து பிரதமா் நரேந்திர மோடியும் நாடாளுமன்றத்தில் உரிய விளக்கமளிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கையில் இருந்து எதிா்க்கட்சிகள் பின்வாங்காது. எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைத்து மசோதாக்களை நிறைவேற்றிவிடலாம் என்ற அரசின் தந்திர முயற்சிகள் வெற்றியடையாது’ என்று கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.