FOLLOW US

ON GOOGLE DISCOVER

சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

இன்ஸ்டா காதலனுடன் ஓடிய பெண் திருமணமான 1 மணி நேரத்தில் மரணம்!

இன்ஸ்டா காதலனுடன் ஓடிய பெண் திருமணமான 1 மணி நேரத்தில் மரணமடைந்தது பற்றி..

News image

திருமணம்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 3:18 pm IST

பிகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தில், இன்ஸ்டாகிராமில் நட்பாகி, காதலித்து அவருடன் ஓடிய இளம்பெண் திருமணமான 1 மணி நேரத்தில் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தனது பெற்றோர், வேறொருவருடன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், 19 வயது பெண், தன்னுடைய இன்ஸ்டாகிராம் காதலருடன் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்ட நிலையில், ஒரே மணி நேரத்தில் புர்னியா சந்திப்பு ரயில் நிலையம் அருகே அப்பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் காதலனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கல்லூரியில் படித்து வந்த மணீஷா குமாரி என்ற மாணவி, காதலனை திருமணம் செய்துகொண்டு காளி கோயிலுக்குச் சென்று திரும்பிய நிலையில் ஒரு மணி நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்துள்ளார். அவரை திருமணம் செய்த காதலன் தில்குஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி திங்கள்கிழமை காலை தில்குஷ், மணீஷாவை அராரியாவிலிருந்து அழைத்துக் கொண்டு 2 மணிக்கு புர்னியா சென்றுள்ளார். ரயில் நிலையத்தில் அவரது நெற்றியில் குங்குமம் வைத்து மனைவியாக ஏற்றுக் கொண்டார். ரயில் நிலையத்திலேயே அவர்கள் தங்கியிருக்கிறார்கள். தங்களது திருமண புகைப்படத்தையும் தில்குஷ் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதற்கிடையே காளி கோயிலுக்கு இருவதும் சென்றிருந்த போது, திடீரென மணீஷாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியாகியிருக்கிறார். அன்றைய தினம் கடுமையான வெய்யில் இருந்ததால், தண்ணீர் சத்து குறைந்து அவர் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் இருவர் குடும்பமும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடல் கூராய்வுக்குப் பிறகே உண்மை தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.