சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

மருத்துவமனை அறை வாடகை 3 நட்சத்திர விடுதி கட்டணத்தைவிட கூடுதலாக இருக்கக் கூடாது! பரிந்துரை

பெரு நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனை அறை வாடகை 3 நட்சத்திர விடுதி கட்டணத்தைவிட கூடுதலாக இருக்கக் கூடாது என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரை பற்றி..

News image

மருத்துவமனை - பிரதி படம் - Center-Center-Tirunelveli

Updated On :12 ஆகஸ்ட் 2026, 2:58 pm IST

நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனை அறையின் கட்டணம், 3-நட்சத்திர விடுதி அறைக்கான கட்டணத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று மருத்துவ சுகாதார அமைப்புகளின் கட்டணம் மற்றும் அணுகல்கள் குறித்து நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

நாடு முழுவதும் சுகாதார சேவைகளை மக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டணங்களை நிர்ணயிப்பது, நோயாளிகள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து மேற்கொள்ளும் மருத்துவச் செலவுகளைக் குறைப்பதற்கும் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பெருநகரில் உள்ள தனியார் மருத்துவமனை அறையின் கட்டணம், அப்பகுதியில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல் அறையின் சராசரி கட்டணத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருக்கிறது.

பொது மற்றும் தனியார் துறைகளில் சுகாதார வசதிகளின் கட்டுபாடியாகும் கட்டணம் மற்றும் அணுகல்தன்மை என்ற தலைப்பிலான, சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 176வது அறிக்கை, குறிப்பாக பெருநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அறைக் கட்டணங்கள் அவசர நடைமுறையாக முறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்த பரிந்துரை அறிக்கையானது, மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டு, மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.

பல தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை மிக அதிகமாக இருக்கும் நிலையில், சில மருத்துவக் காப்பீடுகளில் அந்த தொகை வழங்கப்படாமல் நோயாளிகளே அதனை செலுத்தும் நிலை ஏற்படுகிறது.

எனவே நாடாளுமன்ற குழு பரிந்துரையில், நாட்டில் உள்ள பெருநகரங்களில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் மூன்று நட்சத்திர ஹோட்டல் கட்டண அளவுகோலைக் கட்டாயமாக்க வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்தது. சிகிச்சையில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர், செவிலியர், ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவப் பொருள்கள், உணவு மற்றும் சலவைச் செலவுகள் அடிப்படை அறைக் கட்டணத்துடன் சேர்க்கப்படலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண விவரங்களுடன், எந்தவொரு சிக்கலான அல்லது நீண்டகால மருத்துவ சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு, அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளுக்கு விரிவான, சட்டப்படியான முன்கூட்டிய செலவு மதிப்பீட்டையும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரைத்திருக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.