சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

கற்பனைகளை கேட்க விருப்பமில்லை! மாணவர்களை சுட்டது யார்? அமித் ஷாவிடம் பதில் கேட்கும் ராகுல்!

எதிர்க்கட்சிகளை விவாதத்துக்கு அழைத்த உள்துறை அமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பதில்...

News image

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - ANI

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:28 pm IST

மாணவர்களை சுட்டது யார்? என்ற கேள்விக்கு முதலில் பதிலளியுங்கள் என்று விவாதத்துக்கு அழைத்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என்று அமித் ஷா தெரிவித்த நிலையில், மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்?, பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை காங்கிரஸ் முன்வைத்துள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா, விவாதத்துக்கு இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை தயாராக இருப்பதாகவும், யார் ஓடுகிறார்கள் என்று மக்கள் தீர்மானிக்கட்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்து செய்தியாளர்களுடன் இன்று ராகுல் காந்தி பேசியதாவது:

”அமித் ஷாவின் கற்பனைகளைக் கேட்பதற்கு எங்களுக்கு விருப்பமில்லை. அவர் எங்களுக்கு விரிவுரை ஆற்றுவதிலோ அல்லது அவருடன் விவாதிப்பதிலோ எங்களுக்கு விருப்பமில்லை.

ஒரேவொரு எளிய விஷயத்தை மட்டும் எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். நான் ’நாங்கள்’ என்று குறிப்பிடுவது இந்த நாட்டின் இளைய தலைமுறையினரைத்தான்.

அந்த மாணவர்களைச் சுட்டது யார்? அந்த மாணவர்களைச் சுட உத்தரவிட்டது யார்? மாணவர்களில் ஒருவரின் கண்களைப் பறித்தது யார்? மாணவர்களில் ஒருவரைக் காதில் சுட்டது யார்? ஆணிகள் பொருத்தப்பட்ட தடிகளால் மாணவர்களை அடிக்க உத்தரவிட்டது யார்? அந்த உத்தரவைப் பிறப்பித்தது யார்? அந்த உத்தரவை உள்துறை அமைச்சகம்தான் செயல்படுத்தியது.

எங்கள் பிள்ளைகளைச் சுட அமித் ஷா உத்தரவிட்டாரா, இல்லையா? அவர் உத்தரவிட்டிருந்தால், அவர் குற்றவாளி என்பதால் பதவி விலக வேண்டும். அவர் உத்தரவிடவில்லை என்றாலும், அவர் திறமையற்றவர் என்பதால் பதவி விலக வேண்டும்.

கடந்த 20 நாள்களாக அமித் ஷா காணாமல் போயிருந்தார். உள்துறை அமைச்சருக்குத் துணிச்சல் இல்லை. அவரால் அவைக்கு வர முடியவில்லை” எனக் காட்டமாக பதிலளித்துள்ளார்.

Summary

We are not interested in listening to Mr Amit Shah's imagination - Who shot the students? Rahul demands an answer from Amit Shah!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.