மக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடு
/

அடுத்தடுத்து அதிர்ந்த லடாக்! 4 மணி நேரத்தில் 2 நிலநடுக்கங்கள்!

லடாக்கை அதிர வைத்த நிலநடுக்கங்கள் பற்றி..

News image

நிலநடுக்கம் (கோப்புப்படம்) - DIN

Updated On :13 ஆகஸ்ட் 2026, 12:25 pm IST

யூனியன் பிரதேசமான லடாக்கில் சுமார் நான்கு மணி நேரத்தில் அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி,

முதல் நிலநடுக்கம் இன்று காலை 6.05-க்கு ஏற்பட்டது. இதன் மையப்புள்ளி அட்சரேகை 36.88 டிகிரி மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 74.402 டிகிரியில் அமைந்திருந்தது. இது லடாக்கின் லே பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக 4.3 ரிக்டர் அளவு கொண்ட மற்றொரு நிலநடுக்கம் காலை 9.54 மணிக்கு, வட அட்சரேகை 36.76 டிகிரி மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 75.326 டிகிரி என்ற இடத்தில், லே பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் கூறியது.

இரண்டு நிலநடுக்கங்களும் சுமார் நான்கு மணி நேர இடைவெளியில் லே பிராந்தியத்தில் பதிவாகின. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, சொத்து சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

நில அதிர்வு அபாயம் அதிகம் உள்ள மண்டலத்தில் அமைந்துள்ள இப்பகுதியில், அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தின.

Two earthquakes of moderate magnitude jolted the Union Territory of Ladakh within a span of nearly four hours on Thursday, triggering fear among residents.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.