/
சீனா மற்றும் இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
வடமேற்கு சீனாவின் ஹைசி மங்கோலியா மற்றும் திபெத் தன்னாட்சிப் பகுதியில், ரிக்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவா் உயிரிழந்தாா்; 4 போ் படுகாயமடைந்தனா்.
இதேபோல், இந்தோனேசியாவின் மத்திய சுலாவேசி மாகாணத்தில் உள்ள பாலு நகருக்கு அருகே ரிக்டா் அளவுகோலில் 6.7 அலகுகளாக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.










