நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!நேபாளத்தில் தமிழர்கள்: 4 அமைச்சர்கள் தில்லி செல்கின்றனர்!நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள்: ஐஏஎஸ் அதிகாரிகள் குழு நேபாளம் செல்ல முதல்வர் உத்தரவு!நேபாள பெரு வெள்ளம்: 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை!தேர்தல் வழக்குகள்! நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல்!ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேர் மாயம்! ஜக்கி வாசுதேவ் கண்ணீர்!தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை வேண்டும்! முதல்வர் விஜய்க்கு பெ. சண்முகம் கடிதம்!தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலை? இன்றைய நிலவரம்!சீன நாள்காட்டியால்.. தமிழர்களின் நேபாள பயண திட்டம் மாறியதா? தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை! செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது: ஆதவ் அர்ஜுனாகுழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

அதர் கான் ஜாமீன் மனு: தில்லி போலீஸிடம் பதில் கோரும் உச்ச நீதிமன்றம்!

அதர் கானின் ஜாமீன் மனுவுக்குப் பதில் கோரிய உச்ச நீதிமன்றம் பற்றி...

 riots in North East Delhi

தில்லி கலவரம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 4:02 pm IST

தில்லி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அதர் கான் தாக்கல் செய்த மனு குறித்து தில்லி போலீஸாரிடம் உச்ச நீதிமன்றம் பதில் கோரியுள்ளது.

தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த உயர் நீதிமன்றத்தின் ஜூலை 7-ஆம் தேதி தீர்ப்பை எதிர்த்து அதர் கான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து தில்லி போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பவும். எட்டு வாரங்களுக்குப் பிறகு பட்டியலிடவும், என்று அந்த அமர்வு கூறியது.

2020 தில்லி கலவரத்தின்போது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் சதியில் ஈடுபட்ட முக்கிய குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவராக அதர் கான் இருந்தாரே தவிர, அவர் உள்ளூர் அளவிலான செயல்பாட்டாளர் அல்ல என்றும் கூறி, தனக்கு நிவாரணம் மறுத்த விசாரணை நீதிமன்றத்தின் ஜனவரி 29-ம் தேதி உத்தரவை எதிர்த்து அதர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தான் ஒரு உள்ளூர் அளவிலான ஒருங்கிணைப்பாளர் மட்டுமே என்றும், ஆறு ஆண்டுகளாகக் காவலில் இருப்பதாகவும், அதேபோன்ற சூழலில் உள்ள மற்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது என்றும் கூறி அதரின் வழக்குரைஞர் ஜாமீன் கோரியிருந்தார்.

அதர் கான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு, தில்லி போலீஸார் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் பதில் கோரியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.