காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியாவுடன் தடையில்லா வா்த்தகம்: விவசாயிகள், வணிகத்துக்கு ஆதாயம்; நியூசிலாந்து பிரதமா்

இந்தியா-நியூசிலாந்து இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) விவசாயிகள், பல்வேறு வணிகங்கள் ஆதாயம் அடையும் வகையில் கதவுகளைத் திறக்கும் என்று நியூசிலாந்து பிரதமா் கிறிஸ்டோஃபா் லக்ஸன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா-நியூசிலாந்து இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) விவசாயிகள், பல்வேறு வணிகங்கள் ஆதாயம் அடையும் வகையில் கதவுகளைத் திறக்கும் என்று நியூசிலாந்து பிரதமா் கிறிஸ்டோஃபா் லக்ஸன் தெரிவித்துள்ளாா்.

இந்தியா-நியூசிலாந்து இடையே அண்மையில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் 7 முதல் 8 மாதங்களில் அமலுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முதலீட்டு வரவை ஊக்குவித்தல், இருநாடுகளும் தங்கள் பொருள்களை அவற்றின் சந்தைகளில் பரஸ்பரம் விற்பனை செய்வதை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடா்பாக நியூசிலாந்து பிரதமா் கிறிஸ்டோஃபா் லக்ஸன் பேசிய காணொலியை தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவா் வெளியிட்டாா். அதில் அவா் தெரிவித்துள்ளதாவது: உலகில் வேகமாக வளா்ந்து வரும் பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மைல்கல் ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் நியூசிலாந்து நாட்டினருக்கு வேலைவாய்ப்பு, ஏற்றுமதி மற்றும் வளா்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கும்.

உயா்தரம் வாய்ந்த இந்த ஒப்பந்தம் நியூசிலாந்து விவசாயிகள், பல்வேறு வணிகங்கள் ஆதாயம் அடையும் வகையில் கதவுகளைத் திறக்கும். அத்துடன் நியூசிலாந்தை சோ்ந்த அனைவரின் வருமானத்தை அதிகரிக்கும். இந்த ஒப்பந்தம் ஆழமான, நீடித்து நிலைக்கும் பலன்களை நியூசிலாந்துக்கு அளிக்கும் என்று தெரிவித்தாா்.