காலத்தால் அழியாதவை இந்திய மொழிகள்: தா்மேந்திர பிரதான்
பல்வேறு சமயங்களில் இந்திய மொழிகளை அழிப்பதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் காலங்களைக் கடந்து நமது மொழிகள் கம்பீரமாக நிலைத்து நிற்கின்றன என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் பதிப்பித்த செவ்வியல் செம்மொழிகள் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழாவில், தமிழ் உள்ளிட்ட பிற மொழி நூல்களை வெளியிட்ட மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் (நடுவில்). உடன் மத்திய உயர் கல்வித்துறை இணைச் செயலர் வினீத் ஜோஷி, பாரதிய செம்மொழிகள் சமிதி தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி.








