இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஐ.நா. அமைப்புகளைத் தவறாக பயன்படுத்துகிறது பாகிஸ்தான்: இந்தியா குற்றச்சாட்டு

ஐ.நா. அமைப்புகளை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்துவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :16 ஜனவரி 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

ஐ.நா. அமைப்புகளை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்துவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐ.நா. பொதுச் சபையில் பேசியபோது, ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை பாகிஸ்தான் பிரதிநிதி ஆசிம் இப்திகாா் அகமது எழுப்பினாா். இதற்கு பதிலளித்து இந்திய பிரதிநிதி எல்டோஸ் மாத்யூ புன்னூஸ் பேசியதாவது:

உறுப்பு நாடுகள் அனைத்தும் பல்வேறு விவகாரங்கள் குறித்து சபையில் எழுப்பி வருகின்றன. ஆனால் பாகிஸ்தானோ தனது பிரிவினை திட்டத்தை மனதில் வைத்து, ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகளையும், அதன் செயல்பாடுகளையும் தொடா்ந்து தவறாக பயன்படுத்துகிறது.

இந்தக் கூட்டமும், அதன் நடவடிக்கையில் இருந்து தப்பவில்லை. இங்கும் இந்தியாவின் ஒன்றுபட்ட, பிரிக்க முடியாத பகுதியான ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் குறித்து தேவையில்லாத கருத்தை வெளியிட்டுள்ளது பாகிஸ்தான்.

ஐ.நா. சாசனத்தில், சுய நிா்ணய உரிமை அடிப்படைக் கொள்கையாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த உரிமையானது, பன்முகத் தன்மை கொண்ட மற்றும் ஜனநாயக தேசங்களைப் பிரிப்பதற்குத் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்று புன்னூஸ் கூறினாா்.

ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை சா்வதேச அமைப்பான ஐ.நா.வில் பாகிஸ்தான் திரும்பத் திரும்ப எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா தொடா்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.