அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் ஒன்பது மாவோயிஸ்ட்கள் சரணடைந்ததைத் தொடர்ந்து, ஒடிசாவின் நவரங்பூர் மாவட்டம் நக்சல் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சரணடைந்த நக்சலைட்களில் ஏழு பெண்கள் உள்பட ஒன்பது பேருக்கு மொத்தம் ரூ. 47 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
நக்சலைட்கள் நவரங்பூர் மற்றும் சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்தனர். அவர்கள் சரணடைந்ததன் மூலம் நவரங்கபூர் மாவட்டம் நக்சல் இல்லாத மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 24, 2011 அன்று பிஜு ஜனதா தளம் எம்எல்ஏ ஜகபந்து மாஜி மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி பி.கே. பட்ரோ ஆகியோர் படுகொலை செய்யப்பட்டது உள்பட நக்சல் வன்முறையின் பல சம்பவங்களை இந்த மாவட்டம் கண்டுள்ளது.
மாநிலத்தின் 30 மாவட்டங்களில், மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் இப்போது ஏழு மாவட்டங்களின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளது. அவை, காந்தமால், காலஹண்டி, போலங்கிர், மல்கான்கிரி, கோராபுட், ராயகடா மற்றும் பௌத் ஆகியவையாகும்.
மார்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டிலிருந்து இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிக்கும் மத்திய அரசின் இலக்கு நெருங்கி வரும் நிலையில், நவரங்பூர் மாவட்டம் நக்சலைட்டுகளிடமிருந்து விடுபட்டிருப்பது ஒரு பெரிய சாதனையாகும் என்று காவல்துறை கூறியுள்ளது.
Summary
Odisha's Nabrangpur district has been declared "Naxal-free" after nine Maoists surrendered in neighbouring Chhattisgarh, police said Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்ததாக தம்பதி கைது
ஒன்பது வயது சிறுவன் கொலை: பிளஸ் 2 மாணவா் கைது

‘விரைவில் சீமைக் கருவேல மரங்களை இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாற்றப்படும்’

மலேரியா இல்லாத மாவட்டமாக மாறும் சிவகங்கை
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager




