தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!கரூர் பலி! அரசுப் பணி வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்! மார்க்சிய கம்யூ. எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

கேரளத்தில் திடீரென இடிந்து விழுந்த 130 ஆண்டுகள் பழைமையான மணிக்கூண்டு!

கேரள ரயில் நிலையத்தில் இருந்த 130 ஆண்டுகள் பழைமையான மணிக்கூண்டு திடீரென இடிந்து விழுந்தது குறித்து...

News image

கேரள ரயில் நிலையத்தில் இருந்த 130 ஆண்டுகள் பழைமை மணிக்கூண்டு திடீரென இடிந்து விழுந்தது... - எக்ஸ்

Updated On :9 ஜூலை 2026, 4:50 pm IST

கேரளத்தின் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்த 130 ஆண்டுகள் பழைமையான மணிக்கூண்டு திடீரென இடிந்து விழுந்துள்ளது.

கோழிக்கோடு ரயில் நிலையத்தின் 2 ஆவது மற்றும் 3 ஆவது வழித்தடங்களுக்கு இடையே இருந்த பாரம்பரிய கட்டடமாக அறியப்பட்ட 130 ஆண்டுகள் பழைமையான மணிக்கூண்டு இன்று (ஜூலை 9) காலை 11 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.

இதனைத் தொடர்ந்து, கட்டட இடிபாடுகள் முழுவதும் 2 ஆவது வழித்தடம் மற்றும் அங்கு நின்றிருந்த ரயிலின் மீது விழுந்ததாகவும், மின்சாரக் கம்பிகள் சேதமானதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில், நல்வாய்ப்பாகப் பயணிகள் மற்றும் ரயில்வே பணியாளர்கள் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பழைமை வாய்ந்த மணிக்கூண்டின் கட்டடம் பலம் இழந்து இடிந்து விழுந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே, கட்டடம் பலம் இழந்திருந்ததால் அது இடிந்து விழக்கூடும் என்பது குறித்து தாங்கள் எச்சரிக்கைகளைப் பெற்றிருந்ததாகவும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ரயில் நிலையம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால், நாட்டிலுள்ள ரயில் நிலையங்களில் உள்ள பழைமையான கட்டடங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளதாக, பயணிகள் மற்றும் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Summary

A 130-year-old clock tower at the Kozhikode railway station in Kerala has suddenly collapsed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.