முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

ஒரே நாளில் ரூ. 96.98 கோடி! திருப்பதியில் நன்கொடை வழங்க பக்தர்கள் போட்டி! ஏன் தெரியுமா?

திருமலை திருப்பதி கோயிலில் சலுகைகள் குறைப்பும் நன்கொடைகள் அதிகரிப்பும் குறித்து...

News image

திருப்பதி - கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2026, 12:10 pm IST

திருமலை திருப்பதி கோயிலில் சலுகைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு ஒரே நாளில் ரூ. 96.98 நன்கொடை அளித்துள்ளனர்.

திருமலை திருப்பதி கோயிலில் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்பட்டு, மாற்றம் செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

முன்னதாக, திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை அளிக்கும் பக்தர்கள், ஆண்டுக்கு 3 முறை குடும்பத்தில் 5 பேருடன் 20 ஆண்டுகளுக்கு விஐபி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், ரூ. 10 லட்சம் நன்கொடை அளிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து, தற்போது ரூ. 10 லட்சம் நன்கொடை அளிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை 22,000-ஆக உள்ளது.

நன்கொடை அளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சலுகைகள் குறைக்கப்பட்டு மாற்றம் செய்ய திருமலை தேவஸ்தானம் முடிவு செய்தது.

இதன்படி, ரூ. 10 லட்சம் நன்கொடையாளர்கள், இனிவரும் காலங்களில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே குடும்பத்தில் 5 பேருடன் தரிசனம் செய்ய முடியும். இதுபோன்ற வெவ்வேறு சலுகைக் குறைப்புகளும் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த புதிய நடைமுறை புதிதாக நன்கொடை அளிப்பவர்களுக்கு மட்டுமே என்றும், புதிய நடைமுறை வியாழக்கிழமை (ஜூலை 16) முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, புதிய நடைமுறை அமலுக்கு வருவதற்கு முன்னர் பலரும் பழைய சலுகைகளுக்காக வியாழக்கிழமை நள்ளிரவுக்கு முன்னர் வரையில் கோடிக்கணக்கில் திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு அறக்கட்டளைகளில் நன்கொடை அளித்துள்ளனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதன்கிழமை (ஜூலை 15) ஒரே நாளில் மொத்தம் 2,460 பேர் ரூ.96.98 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.

நன்கொடையாளர்களில் இருவர் தலா ரூ. 1 கோடிக்கும் மேலாகவும், 1,246 பேர் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரையிலும், 1,212 பேர் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலும் நன்கொடை அளித்துள்ளனர்.

Summary

Tirumala Tirupati Devasthanams net record Rs 96.9 crore donation in a day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.