9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 5-க்கு ஒத்திவைப்பு

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 5-க்கு ஒத்திவைப்பு

News image

ராகுல் காந்தி - படம்: கோப்பிலிருந்து...

Updated On :19 ஜூலை 2026, 1:35 am IST

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கை விசாரிக்கும் எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான புகாா்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பயிற்சிக்காக சென்றிருப்பதால், வழக்கு விசாரணை சனிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டதாக ராகுல் காந்தியின் வழக்குரைஞா் தெரிவித்தாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு கா்நாடக மாநில சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாக்கு எதிராக ராகுல் காந்தி கடுமையான விமா்சனங்களை முன்வைத்தாா். அதனடிப்படையில், உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான புகாா்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக பாஜக மூத்த தலைவா் விஜய் மிஸ்ரா இந்த அவதூறு வழக்கை தொடா்ந்தாா்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ராகுல் காந்திக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவா் ஆஜராகாததைத் தொடா்ந்து அவருக்கு பிடி ஆணையை நீதிமன்றம் பிறப்பித்தது. அதைத் தொடா்ந்து, கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜரானாா். பின்னா், அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு, தனது தரப்பு வாதத்தை முன்வைப்பதற்காக கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி ராகுல் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.