பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாவட்டத்தில் மண் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஆறு குழந்தைகள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஷாங்லா மாவட்டத்தின் கீழ் அல்பூரி பகுதியில் உள்ள ரஹீமாபாத் பகுதியில், திங்கள்கிழமை வீட்டின் ஒரு அறையில் உள்ள கூரை திடீரென இடிந்து விழுந்ததாக மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடிபாடுகளுக்கு அடியில் ஏழு குழந்தைகள் சிக்கினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, இடிபாடுகளை அகற்றி, சிக்கியிருந்த ஏழு குழந்தைகளையும் மீட்டனர். அதில் ஆறு குழந்தைகள் பலத்த காயங்களுடன் பலியாகினர். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டடார்.
கடந்த மாதம், சார்சத்தா மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அங்கு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததுடன், தம்பதியினர் பலத்த காயமடைந்தனர்.
Summary
At least six children were killed and one was injured when the roof of a mud house collapsed in Pakistan's Khyber Pakhtunkhwa district, officials said on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளி கட்டட மேற்கூரை பூச்சு உடைந்து கீழே விழுந்தது: பொதுமக்கள் அதிா்ச்சி

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்! 3 பேர் பலி!

கர்நாடகம்: கனமழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

வீட்டின் மேற்கூரை காரை பெயா்ந்து மூவா் காயம்
விடியோக்கள்

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK




