பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 4 நோயாளிகள் பலி!

பிகார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி...

News image

பிகார் மருத்துவமனையில் தீ விபத்து - ஏஎன்ஐ

Updated On :4 ஜூன் 2026, 9:33 am IST

பிகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் வியாழக்கிழமை அதிகாலை பலியாகினர்.

முசாபர்பூர் மாவட்டம், பிரம்மபுரா பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவு முழுவதும் தீ மளமளவெனப் பரவியதால் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால், நோயாளிகளை உடனடியாக வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.

சுமார் 15 நோயாளிகள் வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் அவர்களை மீட்டனர்.

இருப்பினும், குறைந்தது 4 நோயாளிகள் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும், பிற நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், “இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களையும், பிற நோயாளிகளையும் தொடர்புகொள்ள நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. மேலும், இச்சம்பவம் தொடர்பாகத் தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.

மேலும், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், விபத்து நடந்தவுடன் மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டதாகவும் மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பல நோயாளிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Summary

Fire at Bihar Hospital - 3 Patients Dead

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.