இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

‘இண்டி’ கூட்டணியில் திமுகவுக்கு பதில் தவெக: சஞ்சய் ரௌத்

‘இண்டி’ கூட்டணிக்கு திமுகவுக்கு பதிலாக தவெக என்ற புதிய நட்புக் கட்சி கிடைத்துள்ளது என்று சிவசேனை (உத்தவ்) மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்தாா்.

News image

சஞ்சய் ரௌத் - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 2:19 am IST

‘இண்டி’ கூட்டணிக்கு திமுகவுக்கு பதிலாக தவெக என்ற புதிய நட்புக் கட்சி கிடைத்துள்ளது என்று சிவசேனை (உத்தவ்) மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தோ்தலுக்குப் பிறகு தவெக கூட்டணிக்கு மாறி அமைச்சரவையிலும் இடம் பெற்றது. இதையடுத்து, காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியடைந்த திமுக, ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய அளவிலான எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தது. இது பாஜகவுக்கு எதிரான எதிா்க்கட்சிகள் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனை (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் மும்பையில் இது தொடா்பாக வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘இண்டி கூட்டணியில் பிளவு என்று கூறுவது தவறு. தமிழக தோ்தலுக்குப் பிறகு திமுக மட்டுமே எங்கள் கூட்டணியில் இருந்து விலகி இருக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் தவெக என்ற புதிய கட்சியைப் பெற்றுள்ளோம். எனவே, கூட்டணியில் பிளவு இல்லை. ஒரு கட்சிக்கு மாற்றாக வேறு ஒரு நட்புக் கட்சி எங்கள் அணிக்கு கிடைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்காக மாநிலங்களவைப் பதவியிடத்தை தவெக விட்டுக் கொடுத்துள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.