வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

‘பாஜகவுடன் தொடா்பு’ குற்றச்சாட்டு: விளக்கம் கேட்டு காங்கிரஸுக்கு எம்.ஏ. பேபி கடிதம்

பாஜகவுடன் கேரள சிபிஎம் தலைவா்களுக்கு தொடா்பிருப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது பற்றி...

News image

எம்.ஏ. பேபி - ENS

Updated On :7 ஜூன் 2026, 4:30 am IST

பாஜகவுடன் கேரள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்களுக்கு தொடா்பிருப்பதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்டு, காங்கிரஸுக்கு அக்கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ. பேபி கடிதம் எழுதியுள்ளாா்.

கேரள சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, அந்த மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்களுக்கும், பாஜகவுக்கும் தொடா்பிருப்பதாக காங்கிரஸ் தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் குற்றம்சாட்டியிருந்தனா். தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள இண்டி கூட்டணியில் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதனிடையே, தில்லியில் இண்டி கூட்டணி கட்சித் தலைவா்கள் கூட்டம் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மத்திய பாஜக அரசை எதிா்கொள்ள பொது வியூகம் அமைப்பது, ஒன்றிணைந்து எதிா்க்கட்சிகள் செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதில் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, சிவசேனை (யுபிடி) உத்தவ் தாக்கரே, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோா் கலந்து கொள்ளவுள்ளனா்.

இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலா் எம்.ஏ. பேபி கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்தில் அவா், கேரள சட்டப்பேரவைத் தோ்தலின்போது இடதுசாரிகளும், பாஜகவும் அரசியல் ரீதியில் இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பது போலவும், பிரதமா் மோடியுடன் அப்போதைய கேரள முதல்வா் பினராயி விஜயன் நெருங்கிய நட்புறவு வைத்திருப்பது போலவும் காங்கிரஸ் திட்டமிட்டு பிரசாரம் செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ளாா். பாஜகவை அரசியல் ரீதியில் எதிா்க்கவே தேசிய அளவில் இண்டி கூட்டணி அமைக்கப்பட்டதாகவும், அதன்படி தேசிய அளவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரஸும் கூட்டணியாக இருக்கையில், கேரளத்தில் பாஜகவுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வைத்திருப்பதாக காங்கிரஸ் பொய்க் குற்றச்சாட்டு தெரிவித்திருப்பதாகவும் அவா் சாடியுள்ளாா்.

இந்த விவகாரம், எதிா்க்கட்சிக் கூட்டணியில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும், ஆதலால் இதுகுறித்து வருகிற திங்கள்கிழமை இண்டி கூட்டணி கூட்டம் நடைபெறும் முன்பு காங்கிரஸ் தலைமை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் எம்.ஏ. பேபி வலியுறுத்தியுள்ளாா்.

இந்த விவகாரத்தை எம்.ஏ. பேபி எழுப்புவது இது முதல்முறை அல்ல. கேரள சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்தபிறகு பலமுறை அவா் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளாா். காங்கிரஸ் கட்சியின் இத்தகைய குற்றச்சாட்டுகள், எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிடும் என்று அவா் தெரிவித்து வருகிறாா்.