இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல் வீச்சு!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயிலின் மீது கல் வீச்சு

News image

மோகன் பாகவத் - கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 9:07 am IST

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயிலின் மீது கல்லெறிந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய தலைவரான மோகன் பாகவத், கான்பூரிலிருந்து தில்லி நோக்கிச் சென்ற ஸ்வர்ண சதாப்தி விரைவு ரயிலில் (12003) வியாழக்கிழமை பயணம் செய்தார்.

இந்த நிலையில், ஃபிரோசாபாத் மாவட்டம் வழியாகச் சென்றபோது, மோகன் பாகவத் இருந்த இ-1 பெட்டியின் ஜன்னல் கண்ணாடி மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல் எறிந்துள்ளார். கல் எறிந்ததில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.

இருப்பினும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமேதும் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ஆக்ரா மண்டல கூடுதல் டிஜிபி, ஆக்ரா சரக டிஐஜி ஆகியோர் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், ரயில் பெட்டியின் மீது கல்லெறிந்த அடையாளம் தெரியாத நபரை கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Summary

Stone pelted at Shatabdi Express near Firozabad with RSS Chief Mohan Bhagwat on board

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.