ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சமஸ்கிருதம் வெறும் மொழி மட்டுமல்ல.. தேசத்தின் உயிர்நாடி: மோகன் பாகவத்

சமஸ்கிருதத்தை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக..

News image

மோகன் பாகவத் - DPS

Updated On :20 ஏப்ரல் 2026, 7:45 am

நாட்டில் சமஸ்கிருதத்தைப் பரவலாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தினார்.

சமஸ்கிருத பாரதி அமைப்பின் புதிதாகக் கட்டப்பட்ட மத்திய அலுவலக திறப்பு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டு உரையாற்றினார்.

சமஸ்கிருதத்தின் பயன்பாடு அதிகரிப்பது, மற்ற அனைத்து இந்திய மொழிகளையும் செழுமைப்படுத்தி அவற்றுக்கிடையே பாலமாகச் செயல்படுவது மட்டுமல்லாமல், மக்களைத் தொன்மையான சிந்தனைகள், கலாசாரத்துடனும் இணைக்கும்.

பாரதம் என்ற பெயரின் சாரம் வெறும் புவியியல் சார்ந்ததல்ல, அது தனித்த அரசியல்-பொருளாதார அமைப்பும் அல்ல.. பாரதம் என்பது ஒரு மரபு, வாழ்க்கை தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதற்கான ஒரு அடித்தளம். பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள உயிரினங்கள் மற்றும் உயிரற்ற கூறுகளையும் உள்ளடக்கி, வாழ்க்கையைத் தாங்கி நிற்கும் ஒரு மரபாகும்.

உலகிற்கு இந்த மரபின் தேவை எப்போதும் இருந்து வருகிறது. இந்தத் தேவையை நிறைவேற்றுவதே, தங்களை இந்தியர்களாக அடையாளப்படுத்திக்கொள்ளும் அனைவரின் கடமையாகும். இதற்காகப் பாரதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இவையெல்லாம் நிகழ வேண்டுமென்றால், இந்தியாவைப் புரிந்து கொள்வதற்குச் சமஸ்கிருதத்தைப் புரிந்து கொள்வது மிக அவசியமாகும். இந்தியா எண்ணற்ற மொழிகளுக்குத் தாயகமாகத் திகழ்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், தனக்கே உரியத் தனித்துவத்துடன், தேசிய மொழியாகவே விளங்குகிறது.

இந்த மாறுபட்ட தேசிய மொழிகள் அனைத்தையும் இணைக்கும் இணைப்பு என்றால் அதுவே சமஸ்கிருதம். நாட்டில் சமஸ்கிருதத்தை அதிகளவில் முன்னெடுத்துச் செல்ல முயற்சிகளை மேற்கொள்ளுமாறு 'சமஸ்கிருத பாரதி' அமைப்பிற்கு மோகன் பாகவத் அழைப்பு விடுத்தார். இதுதொடர்பான பணிகள், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் சமஸ்கிருதத்தில் உரையாடக்கூடிய நிலையை அடையும் அளவிற்கு முன்னேற வேண்டும் என்று அவர் கூறினார்.

சமஸ்கிருதம் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. இந்தியாவைப் பொறுத்தவரை, சமஸ்கிருதமே தேசத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது. ஏனெனில் சிந்தனை, வாழ்க்கை கலாசாரம் ஆகியவற்றில் இன்றும் உயிர்ப்புடன் திகழும் மிகவும் தொன்மையான மரபாக இந்தியாவே விளங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Summary

RSS chief Mohan Bhagwat on Monday made a strong pitch for the greater promotion of Sanskrit in the country, saying increase in its prevalence will not only enrich all other Indian languages and serve as a bridge between them, but also connect people with ancient thoughts and culture of Bharat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.