நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்நீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
/

போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குச் செல்ல தாமதமானதால் இளைஞர் பலி!

போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குச் செல்ல தாமதமானதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பற்றி...

News image

108 ஆம்புலன்ஸ். - கோப்புப் படம்.

Updated On :12 ஜூன் 2026, 12:14 pm IST

கேரளத்தில் போக்குவரத்து நெருக்கடியால் ஆம்புலன்ஸ் பயணம் தாமதமானதன் காரணமாக இளைஞர் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியில் உள்ள பழங்குடியினர் மருத்துவமனையிலிருந்து, திருச்சூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது, போக்குவரத்து நெரிசலால் தாமதமானதால் இவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் அட்டப்பாடியில் உள்ள வலமாரியைச் சேர்ந்த சஜீவ் குமார் (25) என்று குறிப்பிட்ட காவல்துறையினர் மேலும் தெரிவித்ததாவது:

பழங்குடியினர் சமுதாயத்தைச் சார்ந்த சஜீவ் குமார் என்னும் இந்த இளைஞர் கடும் காய்ச்சல் காரணமாக அட்டப்பாடியில் உள்ள பழங்குடியினர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார்.

வியாழக்கிழமை (ஜூன் 11) மாலை அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உயர் சிகிச்சைக்காக திருச்சூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

ஆம்புலன்ஸுல் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டபோது, ​​அட்டப்பாடி மலைப்பாதையில் சாலையின் குறுக்கே மரம் ஒன்று விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்குச் செல்ல ஒரு மணி நேரம் தாமதமானது. இருப்பினும், மருத்துவமனையை அடையும் போது சஜீவ் குமாரின் நிலை மோசமாகி அவர் உயிரிழந்தார்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Summary

A young man died after the ambulance transporting him from a tribal hospital in the Attappadi area of ​​Palakkad district, Kerala, to the Medical College Hospital in Thrissur was delayed by traffic congestion.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.