பண முறைகேடு வழக்கில், பஞ்சாப் தொழில் துறை அமைச்சா் சஞ்சீவ் அரோராவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ரூ. 100 கோடிக்கும் அதிக மதிப்புடைய கைப்பேசிகள் கொள்முதல் செய்தது தொடா்பாக புது தில்லியில் போலியான நிறுவனத்திடம் இருந்து போலி ஜிஎஸ்டி மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் சஞ்சீவ் அரோரா அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
சஞ்ஜீவ் அரோரா ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அமலாக்கத் துறை வாதங்களின்போது விசாரணை இன்னும் நிலுவையில் இருப்பதாகவும், இந்த நிலையில் ஜாமீன் வழங்கப்பட்டால், மனுதாரர் ஆதாரங்களைச் சிதைக்க முழு முயற்சி எடுப்பார் என்று வழக்குரைஞர் வாதிட்டார்.
சஞ்சீவ் அரோராவின் மனுவை நிராகரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கெனவே ஒரு சாட்சிக்கு ரூ. 35,000 கொடுத்து அவரது வாக்குமூலத்தைத் திரும்பப் பெறுமாறு கேட்டு அவரைச் செல்வாக்குக்கு உட்படுத்த முயன்றதாகவும், அவர் காவலில் வைக்கப்படாவிட்டால் மீண்டும் அவ்வாறு செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியது.
அரோராவின் குடும்பத்தினரும் அவருக்கு நெருக்கமானவர்களும் அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று நீதிமன்றம் குறிப்பிட்டதுடன், அரோராவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.
அரோரா மின்சாரம், தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளைக் கையாண்டு வந்தார்.
அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் பகவந்த் மான், அரோராவின் வசம் இருந்த துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்தார்.
A special court has dismissed the bail plea of Punjab Industries Minister Sanjeev Arora in a money laundering case.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சா் குறித்து அவதூறு கருத்து: மாரிதாஸ் பிணையில் விடுவிடுப்பு

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம்: தென்கொரியாவில் தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா ஆலோசனை







