விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான எந்த திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. இருப்பினும், விவசாயிகளின் பொருளாதார நிலையை வலுப்படுத்த அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
அதில் கிசான் கடன் அட்டை மூலம் சரியான நேரத்தில் போதுமான கடன் வழங்குவது. இந்த அட்டையின்கீழ், திருத்தப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் அடிப்படையில், ரூ. 3 லட்சம் வரையிலான பயிர்க் கடன் மானிய வட்டி விகிதங்களில் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முன்னுரிமைத் துறை கடன் வழிகாட்டுதல்களின்படி, வேளாண்மை உள்ளிட்ட பொருளாதாரத்தின் முன்னுரிமைத் துறைகளுக்கு வங்கி அமைப்பிலிருந்து பிணையமில்லா குறுகிய கால விவசாயக் கடன்களை ரூ.1.60 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக அரசு உயர்த்தியுள்ளது” எனத் தெரிவித்தார்.
Summary
Finance Minister Nirmala Sitharaman said on Monday (March 23) that the central government is not considering any plan to completely waive off farmers' loans. indian government
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்
தோ்தல் வாக்குறுதிபடி விவசாய கடன்களை முதல்வா் தள்ளுபடி செய்வாா்: அமைச்சா் ர.வினோத்

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது: முதல்வர் ஸ்டாலின்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



