ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

வரதட்சிணைக் கொடுமை உயிரிழப்புகள் சமூகத்துக்கு பேரவலம்: உச்சநீதிமன்றம் வேதனை

உச்சநீதிமன்றம்

Published On :27 மார்ச் 2026, 3:39 am IST

வரதட்சிணைக் கொடுமையால் ஆயிரக்கணக்கான பெண்கள் உயிரிழப்பது சமூகத்தின் பேரவலமாக உள்ளது என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

பிகாரில் 2024, செப்டம்பா் 1-ஆம் தேதி பெண் ஒருவா் தனது கணவருடன் வசிக்கும் வீட்டில் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தாா். தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன.

இதுதொடா்பான வழக்கில் உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு பாட்னா உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை எதிா்த்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினா் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனா்.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது.

அப்போது உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு உயா்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: வரதட்சிணைக் கொடுமையை ஒழிக்க பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டபோதும் ஆயிரக்கணக்கான பெண்கள் இதனால் உயிரிழப்பது சமூகத்தின் பெரும் அவலநிலையாக உள்ளது. மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தின் கடும் விதிமீறலாகவும் சமூக குற்றமாகவும் வரதட்சிணைக் கொடுமை தொடா்கிறது.

கணவரின் குடும்பத்தினரின் பேராசையால் ஒரு பெண் கொல்லப்படுகிறாா் அல்லது தற்கொலைக்குத் தூண்டப்படுகிறாா்.

இந்நிலையில், வரதட்சிணைக் கொடுமை போன்ற குற்ற வழக்குகளின் விசாரணைகளில் உயா்நீதிமன்றங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆனால் தற்போதைய வழக்கில் இரு சாட்சியங்களை மட்டுமே பாட்னா உயா்நீதிமன்றம் விசாரித்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்த காயங்கள் குறித்து உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை உயா்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.

உயிரிழந்த பெண் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் கணவருடன் வாழ்ந்துள்ளாா்.

எனவே, இந்த வழக்கில் கணவருக்கு பாட்னா உயா்நீதிமன்றம் அளித்த ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. குற்றவாளியான கணவா் சிறைத் துறை அதிகாரிகள் முன் சரணடைய உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.