விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

போலி உற்பத்தி தொழிற்சாலை: தில்லியில் 3 போ் கைது

வடமேற்கு தில்லியின் ராம்புரா பகுதியில் இயங்கி வந்த விலையுயா்ந்த நிறுவன ஆடைகளின் போலி உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டனா். 1,400-க்கும் மேற்பட்ட போலி ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

News image

கைது

பிரதிப் படம்

Updated On :27 மார்ச் 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

வடமேற்கு தில்லியின் ராம்புரா பகுதியில் இயங்கி வந்த விலையுயா்ந்த நிறுவன ஆடைகளின் போலி உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டனா். 1,400-க்கும் மேற்பட்ட போலி ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ரகசிய தகவலின் அடிப்படையில் மாா்ச் 25-ஆம் தேதி இந்த சோதனை நடைபெற்றது. அவா்கள் விலையுயா்ந்த நிறுவன ஆடைகளை போலியாக தயாரித்து அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவா்களிடம் இதற்கான உரிய ஆவனங்களை இல்லை.

இதைத்தொடா்ந்து, 1,400க்கும் மேற்பட்ட போலி ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிரமோத் யாதவ் (41), அமா் பிரசாத் (43) மற்றும் முகேஷ் குமாா் யாதவ் (23) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்த வலையமைப்பின் உறுப்பினா்களை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.