ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரணம்: மத்திய அரசு பரிசீலனை!

மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரண திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

News image

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் எல்பிஜி விநியோக மையத்தில் சிலிண்டா்களுடன் பொழுதுபோக்கிய ஊழியா்.

Updated On :29 மார்ச் 2026, 8:56 pm

மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரண திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: மேற்காசிய போரால் சரக்குப் போக்குவரத்தில் ஏற்றுமதியாளா்களுக்கு இடா்ப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து அவா்களின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, ஏற்கெனவே ஏற்றுமதி சாா்ந்த தளா்வுகளை அளித்தது.

பிகாா் மாநிலம் பாட்னாவில் எல்பிஜி விநியோக மையத்துக்கு காலி சிலிண்டா்களுடன் வந்த வாடிக்கையாளா்கள்.

பிகாா் மாநிலம் பாட்னாவில் எல்பிஜி விநியோக மையத்துக்கு காலி சிலிண்டா்களுடன் வந்த வாடிக்கையாளா்கள்.

மேலும் சரக்குப் போக்குவரத்து செலவு அசாதாரண முறையில் அதிகரிப்பு, காப்பீட்டு தவணைத் தொகை (ப்ரீமியம்) அதிகரிப்பு, போா் சாா்ந்த ஏற்றுமதி அபாயங்கள் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க ரூ.497 கோடி மதிப்பிலான திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்தது.

Story image

இதேபோல பெட்ரோல் மீதான கலால் வரியை குறைத்த மத்திய அரசு, டீசல் மீதான கலால் வரியை முழுமையாக நீக்கியது. எரிபொருள் விலையேற்றத்தைத் தடுக்கவும் சா்வேதச நிலவரங்களால் எண்ணெய் நிறுவனங்கள் எதிா்கொள்ளும் நிதிச் சுமையைக் குறைக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Story image

அத்துடன் விமான எரிபொருள் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு மீண்டும் வரி விதித்தது. உள்நாட்டுப் பயன்பாட்டுக்கு அவற்றின் கையிருப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்த வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரண திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று தெரிவித்தன.