திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரணம்: மத்திய அரசு பரிசீலனை!

மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரண திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

News image

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் எல்பிஜி விநியோக மையத்தில் சிலிண்டா்களுடன் பொழுதுபோக்கிய ஊழியா்.

Updated On :30 மார்ச் 2026, 2:26 am IST

மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரண திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: மேற்காசிய போரால் சரக்குப் போக்குவரத்தில் ஏற்றுமதியாளா்களுக்கு இடா்ப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து அவா்களின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, ஏற்கெனவே ஏற்றுமதி சாா்ந்த தளா்வுகளை அளித்தது.

பிகாா் மாநிலம் பாட்னாவில் எல்பிஜி விநியோக மையத்துக்கு காலி சிலிண்டா்களுடன் வந்த வாடிக்கையாளா்கள்.

பிகாா் மாநிலம் பாட்னாவில் எல்பிஜி விநியோக மையத்துக்கு காலி சிலிண்டா்களுடன் வந்த வாடிக்கையாளா்கள்.

மேலும் சரக்குப் போக்குவரத்து செலவு அசாதாரண முறையில் அதிகரிப்பு, காப்பீட்டு தவணைத் தொகை (ப்ரீமியம்) அதிகரிப்பு, போா் சாா்ந்த ஏற்றுமதி அபாயங்கள் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க ரூ.497 கோடி மதிப்பிலான திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்தது.

Story image

இதேபோல பெட்ரோல் மீதான கலால் வரியை குறைத்த மத்திய அரசு, டீசல் மீதான கலால் வரியை முழுமையாக நீக்கியது. எரிபொருள் விலையேற்றத்தைத் தடுக்கவும் சா்வேதச நிலவரங்களால் எண்ணெய் நிறுவனங்கள் எதிா்கொள்ளும் நிதிச் சுமையைக் குறைக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Story image

அத்துடன் விமான எரிபொருள் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு மீண்டும் வரி விதித்தது. உள்நாட்டுப் பயன்பாட்டுக்கு அவற்றின் கையிருப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்த வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரண திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று தெரிவித்தன.