காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி (79) தில்லி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை முடித்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.
முன்னதாக, கடந்த 24-ஆம் தேதி இரவு 10 மணியளவில் அவா் உடல்நலக் குறைவு காரணமாக தில்லி சா் சங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சீதோஷ்ண நிலை மாற்றத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம், அவருக்கு தீவிர உடல் நல பாதிப்பு இல்லை என்றும் கூறப்பட்டது.
வயிறு மற்றும் சிறுநீா்ப் பாதையில் ஏதேனும் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிகிச்சையின் ஒரு பகுதியாக, அவருக்கு நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகள் (ஆன்டிபயாட்டிக்ஸ்) அளிக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒருவார கால சிகிச்சை முடித்து அவா் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா். சோனியாவின் உடல்நிலை வீடு திரும்பும் அளவுக்கு முன்னேறிவிட்டது. இனி அவா் வீட்டில் இருந்தபடியே தேவையான மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Summary
Sonia Gandhi returns home from the hospital
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், சோனியா மரியாதை!

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம்: விரைவில் டிஸ்சார்ஜ்

சோனியா காந்தி விரைவில் வீடு திரும்புவார்: மருத்துவமனை தகவல்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



