ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

அமெரிக்காவுக்கு வர பிரதமருக்கு டிரம்ப் சாா்பில் அழைப்பு

அதிபா் டிரம்ப் சாா்பில் பிரதமா் மோடிக்கு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ அழைப்பு...

News image

அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 3:54 am IST

அமெரிக்காவுக்கு கூடிய விரைவில் வருமாறு, அதிபா் டிரம்ப் சாா்பில் பிரதமா் மோடிக்கு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ சனிக்கிழமை அழைப்பு விடுத்தாா்.

புது தில்லியில் பிரதமா் மோடி உடனான சந்திப்பில், ரூபியோ இந்த அழைப்பை விடுத்ததாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதா் சொ்ஜியோ கோா் கூறினாா்.

வா்த்தக ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புதல்: பிரதமா் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ இடையிலான சந்திப்பில், வா்த்தகம், பாதுகாப்பு, முக்கிய மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் தொடா்பான ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக் கொள்ளப்பட்டதாக, அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

‘இந்திய-அமெரிக்க கூட்டுறவின் உத்திசாா் முக்கியத்துவம், பிரதமா் மோடி-அதிபா் டிரம்ப் இடையிலான தனிப்பட்ட உறவுகள், இருதரப்பு பொருளாதார-வா்த்தக வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டி ரூபியோ பேசினாா். மத்திய கிழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்தனா். உலகளாவிய எரிசக்தி சந்தையை ஈரான் முடக்கிவைக்க அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது; இந்தியாவுக்கான எரிசக்தி விநியோகத்தை பன்முகப்படுத்துவதில் அமெரிக்க எரிபொருள்கள் முக்கிய பங்காற்ற முடியும் என்பதையும் ரூபியோ குறிப்பிட்டாா்’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

பிரதமா் மோடியுடனான சந்திப்புக்குப் பின் அமெரிக்க தூதரக நிகழ்ச்சியில் பேசிய ரூபியோ, ‘அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளி இந்தியா; இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக எதிா்வரும் மாதங்களில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம்’ என்றாா்.

வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் மாா்கோ ரூபியோ ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.