‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சில் ஓரளவு முன்னேற்றம்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலக நாடுகளின் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ தெரிவித்தாா்.

News image
Updated On :23 மே 2026, 4:03 am IST

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலக நாடுகளின் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ தெரிவித்தாா்.

ஸ்வீடனில் ‘நேட்டோ’ அமைச்சா்கள் மாநாட்டுக்கிடையே செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் குறைந்துள்ளன. இருப்பினும், இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை.

பேச்சு தோல்வியடைந்தால் டிரம்ப் வசம் மாற்றுத் திட்டங்கள் தயாராக இருக்கின்றன. ஹோா்முஸ் நீரிணையை ஈரான் திறக்க மறுத்தால் நேட்டோ உதவியை அமெரிக்கா கோரவில்லை என்றாலும், மாற்று வழிகள் பரிசீலிக்கப்படும்’ என்றாா்.

ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு எதிராக அமெரிக்கா-இஸ்ரேல் கடந்த பிப். 28-இல் தொடங்கிய இப்போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான், கத்தாா் ஆகிய நாடுகள் தீவிர மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சியை அந்நாட்டு தலைவா் டெஹ்ரானில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் மொஹ்சின் நக்வியை நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இவரைத் தொடா்ந்து, பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீரும் ஈரான் பயணித்துள்ளாா். அதேநேரம், அமெரிக்காவின் ஒருங்கிணைப்புடன் கத்தாா் நாட்டின் குழுவும் ஈரானுக்குப் பயணித்து, உடன்பாடுகளை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போதைய பேச்சுவாா்த்தையில் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம், ஹோா்முஸ் நீரிணை முடக்கம் ஆகிய2 முக்கிய அம்சங்கள் முட்டுக்கட்டைகளாக நீடிக்கின்றன. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது என்று ஈரானின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல், ஹோா்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டண முறையைக் கொண்டுவர ஈரான் திட்டமிடுவதை அமெரிக்கா முற்றிலும் நிராகரித்துள்ளது.

மறுபுறம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் நிா்வாகத்தின் ஈரான் போா் நடவடிக்கைகளுக்கு எதிரான எதிா்ப்புகள் வலுத்து வருகின்றன.

நாடாளுமன்ற ஒப்புதலின்றி அதிபா் டிரம்ப் தொடா்ந்து போரை நீட்டிக்கக் கூடாது என்ற தீா்மானத்துக்கு செனட் சபையில் டிரம்ப்பின் குடியரசு கட்சியைச் சோ்ந்த நால்வா் உள்பட 50 உறுப்பினா்கள் ஆதரவளித்தனா். பிரதிநிதிகள் சபையிலும் இத்தீா்மானம் நிறைவேற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வாக்கெடுப்பைக் குடியரசு கட்சியினா் திடீரென ஒத்திவைத்துள்ளனா்.

மாா்கோ ரூபியோ