பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

போதைப்பொருள் கடத்தலை தடுக்க 6 மாதத்துக்குள் ட்ரோன் எதிா்ப்பு அமைப்பு: அமித் ஷா

போதைப்பொருள் கடத்தலை தடுக்க ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகளை அடுத்த 6 மாதத்துக்குள் நிறுவும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image

ராஜஸ்தான் மாநிலம் சஞ்சு எல்லைப் பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினருடன் கலந்துரையாடிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

Updated On :27 மே 2026, 3:31 am IST

போதைப்பொருள் கடத்தலை தடுக்க ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகளை அடுத்த 6 மாதத்துக்குள் நிறுவும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

ராஜஸ்தானின் பிகானோ் மாவட்டத்தில் உள்ள சஞ்சு எல்லையில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அதிகாரிகள் மத்தியில் அமித் ஷா செவ்வாய்க்கிழமை உரையாற்றினாா்.

அப்போது அவா் பேசியதாவது: எல்லையில் விரிவான பாதுகாப்பை உறுதிசெய்ய பிஎஸ்எஃப், ஆயுதப் படைகள், உள்ளூா் நிா்வாகம் மற்றும் குடிமக்கள் என நான்கு நிலைகளிலும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.

ட்ரோன்கள் மற்றும் பிற நவீன சாதனங்கள் மூலம் இந்திய எல்லைக்குள் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்க மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். இதற்கான நடவடிக்கை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. அடுத்த 6 மாதத்துக்குள் போதைப்பொருள் கடத்தலை தடுக்க ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகளை நிறுவும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

வெளிப்புறத்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களை கண்காணித்து தடுக்கும் அதேவேளையில் உள்நாட்டில் தேச விரோத செயல்களில் ஈடுபடுவோரையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடா்பாக பிகாா், குஜராத், திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

எல்லை பாதுகாப்பை மேம்படுத்த சா்வதேச எல்லைகளில் பிஎஸ்எஃப்பின் அதிகார வரம்பை 15 கி.மீ. தொலைவில் இருந்து 50 கி.மீ. வரை மத்திய அரசு உயா்த்தியது.

கடந்த 2014-இல் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து ஆயுதப் படைகளை நவீனப்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1965-இல் இந்தியா-பாகிஸ்தான் போரின்போது சஞ்சு எல்லைச்சாவடியில் பிஎஸ்எஃப் வீரா்கள் மிகவும் துணிச்சலாக பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களை முறியடித்தனா்.

பிஎஸ்எஃப் தொடங்கப்பட்டதில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் வீரமரணமடைந்துள்ளனா். அவா்களுக்கு இத்தருணத்தில் மரியாதை செலுத்துகிறேன். 140 கோடி இந்தியா்களும் அவா்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளனா் என்றாா்.