தில்லியில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு வரவேற்பு!கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை ராஜிநாமா? குண்டர் தடுப்புச் சட்ட ரத்து வழக்கு! உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் முன்னாள் காவல் ஆணையர் அருண்!இணையும் அதிமுக: இபிஎஸ்ஸுடன் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு!பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
/

சாலை போட முடியாவிட்டால் ஹெலிகாப்டர் தாருங்கள்: அமித் ஷாவுக்கு வந்த கோரிக்கை

கிராமத்துக்கு சாலை போட முடியாவிட்டால் ஹெலிகாப்டர் தாருங்கள் என அமித் ஷாவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

News image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்) - File photo

Updated On :27 மே 2026, 12:52 pm IST

ராய்பூர்: பல பத்தாண்டு காலமாக சாலை வசதிக்காகக் காத்திருந்து, கிடைக்காத விரக்தியில் இருக்கும் கிராம மக்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், சாலை வசதி செய்ய முடியாவிட்டால், ஹெலிகாப்டர் வாங்கிக் கொடுங்கள் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், பாஸ்தர் கிராம மக்கள், மிக விநோதமான கோரிக்கை ஒன்றை மத்திய அமைச்சருக்கு அனுப்பியிருக்கிறார்க.ள

மருகி என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வைத்திருக்கும் கோரிக்கை சமூக வலைத்தளத்தில் வைரலாகியிருக்கிறது. மாவோயிஸ்டுகள் வசம் இருந்த இந்த கிராமத்தில் தற்போது வரை சாலை வசதிகள் போட முடியாமல் மக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவர்கள் அனுப்பியிருக்கும் கடிதத்தில், மிக நீண்ட காலமாக, நாங்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், எங்கள் கிராமத்துக்கு சாலை வசதி அமைக்க அதிகாரிகளால் முடியவில்லை. எனவே, நீங்கள் எங்களுக்கு ஹெலிகாப்டர் கொடுத்துவிட்டால், அவசர காலங்களில் அதன் மூலம் மக்கள் பயணிப்பார்கள் என்று எழுதியிருக்கிறார்கள்.

பல ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாததால், கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மிகுந்த அதிருப்தியில் இந்த கடிதத்தை எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.

உதவியின்றி, அதிருப்தியில் இருக்கும் மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி கேட்டு வருகிறார்கள். உறுதிமொழிகள் மட்டுமே வருகின்றன. சாலை வரவில்லை. எல்லோரையும் கேட்டுவிட்டோம், மனு கொடுத்துவிட்டோம், ஆட்சியரைக் கூட சந்தித்துவிட்டோம். ஆனால் எதுவும் பயனில்லை.

பத்தாண்டுகளுக்கு முன்பு, சாலை அமைக்க வந்த ஒப்பந்ததாரரும், இங்கு சிறு பாலங்கள் அமைத்துத்தான் சாலை போட முடியும் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள். அதன்பிறகு சாலையே வரவில்லை. மழைக்காலங்களில் எங்களால் வெளியே செல்லவே முடியாது. கர்ப்பிணிகள், முதியவர்களை அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்ல வேண்டுமானால் பல கிலோ மீட்டருக்கு அவர்களை கரடுமுரடான பாதையில் சுமந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது என்கிறார்கள் கிராம மக்கள்.

ரேஷன் வாங்க 11 கிலோ மீட்டர் நடக்கிறோம், மாவோயிஸ்டுகள் இங்கிருந்து சென்றுவிட்டார்கள். ஆனாலும் எங்களுக்கு சாலை கூட மறுக்கப்படுகிறது என்று தெரிவித்து வருகிறார்கள்.

Summary

A request has been made to Amit Shah to provide a helicopter if the village cannot be built with a road.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.