அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

பிரிக்ஸ் உச்சிமாநாடு: செப்.13-ல் காலை 6 மணிக்கே தொடங்கும் தில்லி மெட்ரோ சேவைகள்!

பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கே அனைத்து வழித்தடங்களிலும் தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்படுவது தொடர்பாக...

Delhi Metro train services will begin at 6 am on all corridors on Sunday

பிரிக்ஸ் உச்சிமாநாடு செப்.13-ல் காலை 6 மணிக்கே தொடங்கும் தில்லி மெட்ரோ சேவைகள். - கோப்புப்படம்

Published On :

புது தில்லி: பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி, போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், தேர்வுகள் எழுதும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மாநாட்டிற்குச் செல்லும் பிரதிநிதிகளின் போக்குவரத்திற்கு வசதியாக, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கே அனைத்து வழித்தடங்களிலும் தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

பொதுவாக, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணிக்கு பிங்க், மெஜந்தா மற்றும் கிரே வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்குகின்றன. ஆனால், பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி, பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வழித்தடங்களிலும் வழக்கமான நேரத்தை விட முன்கூட்டியே ரயில்கள் இயக்கப்படுகிறது.

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பிரிக்ஸ் உச்சிமாநாடு காரணமாக போக்குவரத்து கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், தேர்வுகள் எழுதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் மாநாட்டிற்குச் செல்லும் பிரதிநிதிகளுக்கு வசதியாக, ஞாயிற்றுக்கிழமை அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 6 மணிக்குத் தொடங்கப்படும்" என்று கூறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சேவைகள் முன்னதாகவே தொடங்கப்படுவது, தேர்வெழுதும் விண்ணப்பதாரர்கள் மற்றும் பொதுமக்கள் தடையின்றியும் சரியான நேரத்திலும் பயணம் செய்வதை உறுதிசெய்ய உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உச்சிமாநாட்டின் போது நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்பதால், மாணவர்கள் மற்றும் பிற பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Summary

To facilitate the smooth and timely movement of students appearing for examinations and the general public amid traffic restrictions due to the BRICS Summit, Metro train services will commence at 6 am on all lines on Sunday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.