பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை! - சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

தில்லி மற்றும் குவான்சூ நகரங்களுக்கு இடையே மீண்டும் நேரடி விமான சேவை துவங்குவதாக சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு...

தில்லி - குவான்சூ இடையே நேரடி விமான சேவை - கோப்புப் படம்

Published On :

தில்லி மற்றும் சீனாவின் குவான்சூ நகரங்களுக்கு இடையே நேரடி விமானங்களை இயக்கவுள்ளதாக, சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவின் தெற்கு நகரமான குவான்சூவுக்கும் இந்தியத் தலைநகர் தில்லிக்கும் இடையே வரும் செப். 21 ஆம் தேதி முதல் நேரடி விமானங்கள் இயக்கப்படும் என சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று (செப். 12) அறிவித்துள்ளது.

தில்லியில் நடைபெறும் 18 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ஜின்பிங் இருவரும் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ள நிலையில், சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா உடன் தனது சேவையை மீண்டும் தொடங்கும் சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம், தில்லி மற்றும் குவான்சூ இடையே வாரத்திற்கு 100-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இந்தியா மற்றும் சீனா உறவுகளின் மேம்பாட்டைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையேயான விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் சீனா மற்றும் தில்லி இடையே ஏர் இந்தியா நிறுவனம் அதன் விமான சேவைகளைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Summary

China Southern Airlines has announced that it will operate direct flights between Delhi and the Chinese city of Guangzhou.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.