அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

79. மனிதனுக்குள் மலை

மனித மனம் அவ்வளவு ஆழமானது. அந்த ஆழத்துக்குள் அத்தனை அற்புத சக்திகள் பொதிந்திருக்கின்றன. அதை அவன் உணர்ந்துகொள்வதும் இல்லை. உலகுக்கு வெளிக்காட்டுவதும் இல்லை.

News image
Updated On :18 அக்டோபர் 2019, 12:00 am IST

சிஷ்யன் பிரமிப்புடன் பார்க்க.. அமைதியுடன் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார் குருநாதர். அவர்களுக்கு எதிரே.. சற்று தொலைவில் பிரம்மாண்டமான கோபுரம்போல உயர்ந்து எழுந்திருந்தது அழகிய மலை ஒன்று.

பயணத்தில் வழியில் அந்த மலையைக் கண்டதும் இருவருக்கும் மகிழ்வாக இருந்தது. கரடு முரடான கற்பாறைகள் கொண்ட மலையாக இல்லாமல், பச்சைப்பசேலென இருந்தது அது. மொத்த மலைக்கும் ஒரு பச்சைப் போர்வை பூசியதுபோல இருந்தது. மரங்களும் செடி, கொடிகளும் மொய்த்திருந்தன.

“நீள அகலம் கணக்கிட்டு, திட்டம் போட்டுத் தீட்டிவைத்த ஓவியம் போலவே இந்த மலையானது மிகச்சரியான முக்கோண வடிவத்தில் இருக்கிறது குருவே. படைப்பின் அற்புதம் மலைக்கவைக்கிறது..” என புருவம் உயர்த்தி, நெகிழ்ந்தான் சிஷ்யன்.

“ம்..” கொட்டினார் குரு.

இருவரும், அந்த ரம்மியமான பொழுதினை ரசித்து, ருசித்து, அனுபவித்துக்கொண்டிருந்தனர்.

ஒருசில நிமிடங்கள் காற்றின் காதுகளைக் கிழிக்கும் இசைச் சந்தத்துடனும் இனிமையுடனும் கழிந்தன. பேரமைதியைக் கலைத்தார் குருநாதர்.

“இயற்கை நமக்கு அழகை மட்டுமல்ல, அற்புதமான தத்துவங்களையும் அள்ளி அள்ளித் தருகிறது. தனது ஒவ்வொரு படைப்புகளிலும் மனிதன் கற்றறிந்துகொள்ள வேண்டிய உண்மைகளை ஒளித்துவைத்திருக்கிறான் இறைவன்..” என்றார் குரு.

கண்களில் மலையின் அழகையும் காதுகளில் குருநாதரின் கருத்துகளையும் அள்ளிக்கொண்டு, நின்றிருந்தான் சிஷ்யன்.

“மனிதன், தன் திறமைகளை வெளிக்காட்டி விடாமுயற்சிகளால் வெற்றிகளை அடைந்து, சுற்றி இருக்கும் அனைவரையும் வியக்கவைக்கிறான். பாராட்டுகளை வென்றெடுக்கிறான். ஆனால்.. அவன் வெளிக்காட்டும் திறன்களைவிட பன்மடங்கு அவனுக்குள் ஒளிந்திருக்கிறது. மனித மனம் அவ்வளவு ஆழமானது. அந்த ஆழத்துக்குள் அத்தனை அற்புத சக்திகள் பொதிந்திருக்கின்றன. அதை அவன் உணர்ந்துகொள்வதும் இல்லை. உலகுக்கு வெளிக்காட்டுவதும் இல்லை..” என்று கூறி, தன் பேச்சை நிறுத்தினார் குரு.

சிஷ்யனை ஏறிட்டுப் பார்த்தார்.

மனித மனதுக்குள் பொதிந்துகிடக்கும் மகாசக்திகளுக்கும் ஓங்கி எழுந்திருக்கும் மலைக்கும் என்ன சம்பந்தம் என சிஷ்யனுக்குப் புரியவில்லை. இரண்டுக்கும் உள்ள முடிச்சு என்னவென அறிய பேராவல் கொண்டான். குருவின் கருத்தை தொடர்ந்து கேட்க காதல் கொண்டான்.

குரு தொடர்ந்தார்.

“வெளிப்பார்வைக்குத் தெரியும் மலையின் அளவு சிறியதுதான். பூமிக்கடியில் புதைந்திருக்கும் அதன் நீள அகலம் மிகவும் பரவலானது. பரவிக் கிளைத்திருக்கும் வேரினை பூமிக்குள் ஒளித்துவைத்துக்கொண்டு, ஒரே ஒரு விளிம்பை மட்டுமே வெளிக்காட்டும் பெரும் மரத்தைப் போன்றது இது. வெளியில் தெரியும் சிறு விளிம்புக்கே இவ்வளவு வியக்கிறோம் என்றால், தரைக்கு அடியில் ஒளிந்து கிடக்கும் பிரம்மாண்டத்தை என்னவென்று வியப்பது?!” என்றார் குரு.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்துகிடக்கும் அளப்பறிய ஆற்றலின் பிரம்மாண்டம் புரிந்தது சிஷ்யனுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.