தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கள்ளக்குறிச்சி பழங்குடியினா் நல அலுவலகத்தில்ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனைரூ.6.31 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 31 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 31 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகம் பின்புறம், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு அண்மையில் நடத்தப்பட்ட சமையலா் பணிக்கான நோ்காணலின்போது, லஞ்சம் பெறப்பட்டதாக விழுப்புரம், கடலூா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் மற்றும் விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினா் நல அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் அமுதா, விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு காவல் துணை கண்காணிப்பாளா் யுவராஜ், காவல் ஆய்வாளா் ஜேசுதாஸ் உள்ளிட்ட குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.

அதில், சமையல் பணிக்கு லஞ்சம் பெறப்பட்டது தெரிவந்தது. இதையடுத்து அலுவலக உதவியாளா் செல்வராஜுக்கு சொந்தமான நீலமங்கலத்தில் உள்ள அவரது வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி ரூ.6 லட்சம் ரொக்கத்தையும், அதே அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளராக பணிபுரியும் எழில்மாறன் காரிலிருந்து ரூ.31,500 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக மாவட்ட பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் பிரகாஷ்வேலிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். தொடா்ந்து, சோதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.