சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

காஞ்சிபுரத்தில் தெருநாய் தொல்லை: பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரத்தில் முக்கிய பகுதிகளில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடுமையான

Updated On :12 செப்டம்பர் 2013, 5:24 am

காஞ்சிபுரத்தில் முக்கிய பகுதிகளில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் முக்கிய பகுதிகளான பெருமாள் தெரு, மளிகைத் தெரு, பஞ்சுப்பேட்டை பெரிய தெரு, சின்னத் தெரு, பருத்திகுளம் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துவிட்டன. இதில் பல நாய்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, வெறிபிடித்து திரிகின்றன. இதனால் இரவு பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிவிட்டு காஞ்சிபுரத்துக்கு ரயில் மூலம் வரும் பயணிகள் இத் தெருநாய்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து, நல்ல நிலையில் உள்ள நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்வது, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்களைப் பிடித்து உரிய சமூக அமைப்புகளிடம் ஒப்படைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.